Saturday, March 19, 2011

தமிழின உணர்வாளர்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய சட்டமன்றத்தேர்தல்.


மிழின உணர்வாளர்களின் எண்ணப்படியே வைகோ தற்போது அண்ணாதிமுக கூட்டணியிலிருந்து விலகி விட்டார். ஜெயலலிதா என்பவள் தான் எப்போதும் பாப்பாத்தி என்று காட்டிக்கொள்பவர். அய்யங்காரு ஆத்து திமிர் அவருக்கு எப்போதும் இருக்கும். பதவிக்கு வந்ததும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் மனோபாவம் அவரிடம் எப்போதுமே உண்டு.

அடிக்கடி உணர்சிப்பிளம்பாகும் வைகோ இவரைத் தேவையில்லாமல் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார். நாமும் இந்தத் தேர்தலில் தேவையில்லாமல் இந்தப் பெண்ணை ஆதரித்து இருப்போம்.

அய்யா சீமானே! நீரும் தான் கருணாநிதியை எதிர்க்கிறோம் என்று சொல்லி இந்த அம்மையாரை ஆதரிக்காதேயும்.

ஜெயலலிதாவின் கூட்டில் தற்போது இருக்கும் கைத்தடிகளில் பரிதாபத்துக்குரிய ஒரே நபர் தா. பாண்டியன் தான். அவருக்கு அங்கே என்ன கிடைக்கிறதோ? யார் கண்டார்கள்.

தமிழின உணர்வாளர்களே, தேர்தல் வந்தால் கண்டிப்பாக யாருக்காவது ஓட்டுப் போட்டேயாக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? யாருக்குப் போடுவீர்கள் ஓட்டு?   ஈழத்தில் தமிழினத்தை அழித்த கருணாநிதி-காங்கிரஸ்-டபுள் ஏஜண்டுகள்- சாதிக்கட்சிகள் கூட்டணிக்கா? பார்ப்பன பேய்-சீன,சிங்கள அடிவருடிகள் மார்க்சிஸ்ட்-மானங்கெட்ட எடுபிடிகள்-கூட்டணிக்கா? யாருக்குமே நாம் வாக்களிக்க வேண்டியதில்லை. கையில் மையிட்டு கறைபடிந்து கொள்ளவேண்டியதில்லை. 

வாரிசு அரசியல் நடத்தும் குற்றப்பரம்பரைகள்  கொண்ட கூட்டணிக்கட்சிகள் ஆட்சியைத்தக்க வைத்து மீண்டும் மீண்டும் நாட்டைக் கொள்ளையிடப் போகின்றன. ஐந்தாண்டுகள் பொறுத்து விட்ட தென்னகத்து பூலான் தேவியும் குடித்துவிட்டு சட்டமன்றத்துக்கு வரவிருக்கும் குடிகார நாயும் மக்களுக்காக ஆட்சி நடத்துவார்களாம்.  நாம் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாம்.

தற்போது வைகோ எடுத்த முடிவு  சரி என்றே படுகின்றது. பொறுத்திருங்கள் கருணாநிதி இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாரில்லை,   ஸ்டாலினும் அழகிரியும் மாறன் மகனும் கனிமொழியும் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொள்ளத்தான் போகிறார்கள்.

இன உணர்வாளர்கள் ஓரணியில் திரட்ட வேண்டிய பெரும் பொறுப்பு வைகோவிற்கு இருக்கிறது. பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், சீமான், பாரதிராஜா, வைகோ, இன்னும் ஏராளமானோர் ஓரணியில் வரவேண்டும் அண்ணா, பெரியார் கனவுகள் மெய்ப்பட வேண்டும். 

வைகோ தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார் என்று நினைத்து இந்தப் பதிவு எழுதப்பட்டது. வைகோ இந்த முடிவிலிருந்து பின் வாங்கினால் படித்ததை மறந்து விடுங்கள் என்று தண்டனிட்டு வேண்டிக்கொள்கிறேன். 

Sunday, March 6, 2011

இந்திரா காந்தி பேரனின் திருமணத்தைப் புறக்கணித்த ராஜீவ் காந்தியின் வாரிசுகள்.



வருண் காந்திக்கு காசியிலே திருமணம். எல்லாரும் அறிந்ததே. இவர் ராஜீவ் காந்தியின் தம்பி சஞ்சய் காந்தியின் மகன் ஆவார். உங்களுக்குத் தெரியும். இன்று ராஜீவ் சஞ்சய் இருவரும் இல்லை. அதுவும் உங்களுக்குத் தெரியும். ராஜீவுக்கு முன்பே சஞ்சய் அரசியலுக்கு வந்தவர். இவருக்கு முன்பே இறந்து விட்டவர். சஞ்சய் இருந்திருந்தால் ராஜீவ் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. 

சரி இதையெல்லாம் ஏன் நான் சொல்கிறேன்?

இன்று வருண் காந்தியின் திருமணத்திற்கு ராஜீவ் குடும்பத்தில் இருந்து ஒருவரும் செல்ல வில்லை. இத்தனைக்கும் வருண் நேரில் சென்று இத்தாலியிலிருந்து டூரிஸ்ட் விசாவில் வந்து காந்தி குடும்பப் பெயரைத் தழுவிக் கொண்டாலும்  தன்னுடைய பெரியம்மா சோனியா என்ற மரியாதையில் சென்று திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். சரி கொழுந்தனாரின் மகன் தானே என்று சோனியாவோ சித்தப்பா மகன் என்று பிரியங்காவோ ராகுலோ சென்று திருமணத்தைக் காணவில்லை.

என்னதான் மனஸ்தாபம் என்றாலும் திருமணம் போன்ற விசேசங்களுக்குக் கூடவா செல்லக் கூடாது. இந்தியர்கள் யாரும் இப்படிச் செய்ய மாட்டார்கள். ஒரு வேலை இத்தாலியில் இப்படி எல்லாம் இருக்கலாமோ என்னவோ யார்கண்டது?

ன் மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை அதனால் கொழுந்தனாரின் மகன் திருமணத்திற்குச் செல்லவில்லையா சோனியா? 

சொல்லப்போனால் சஞ்சய் சாகாமல் இருந்திருந்தால் ராஜீவ் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. பிரதமர் ஆகியிருக்க முடியாது. ஈழத்தில் கொலைகள் செய்திருக்க முடியாது. செத்திருக்க முடியாது. சோனியாவும் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. ராகுலும் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. அமேதியில் MP  ஆகியிருக்க முடியாது. ஆழம் தெரியாமல் காலைவிட்டு இப்போது காலை ஒடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்க முடியாது. 

அதாவது நான் சொல்ல வருவது என்ன வென்றால் வருனுக்குப் பாத்தியப்பட்ட சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இத்தாலியர்கள் குறைந்த பட்ச நன்றியைக் காட்டவாவது திருமணத்திற்குச் சென்றிருக்கலாம்.

 என்ன நான் சொல்றது?

Saturday, February 26, 2011

தமிழ் : உலகில் அதிகம் பேசப்படும் இருபது மொழிகளில் ஒன்று


எத்தனை தோல்விகள், எத்தனை அவமானங்கள், எத்தனை விரக்திகள், எத்தனை மிரட்டல்கள், சொல்லிக்கொண்டே போகலாம்...இருந்தாலும் தமிழின் பெருமையை அழிக்க முடியாது, தோழர்களே...இதோ உங்களுக்காக நம் பெருமையை நாம் தெரிந்து கொள்ள இந்தப் பதிவு....


உலகில் உள்ள மொழிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் எத்னோலாக் என்ற இணையதளம் உலகத்தில் உள்ள மொழிகள், அவற்றின் பயன்பாடுகள், அவைகள் பேசப்படும் நாடுகள், அவைகளைப் பேசுவோர் பற்றி ஆராய்ச்சி செய்து அவைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிடும். இவர்கள் 2009 ஆம் ஆண்டு 

Ethnologue: Languages of the World Sixteenth Edition

 என்ற நூலை வெளியிட்டு உள்ளார்கள். அதில் அவர்கள் உலக மொழிகளின் தரவரிசையை  வெளியிட்டுள்ளார்கள். அதில் தமிழுக்கு 18 ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் 17 நாடுகளில் தமிழ் பேசப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.  

6.5 கோடிப்பேர் தமிழை முதன்மை மொழியாகப் பேசுவதாக அந்த நூல் சொல்கிறது.

Ethnologue: Languages of the World Sixteenth Edition




ஆனால், அதே நிறுவனம் வெளியிட்ட தனது பதினைந்தாம் வெளியீட்டில் தமிழுக்கு பதினேழாம் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது. தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 6.8 கோடியாக இருந்தது. இந்தியர்கள், சிங்களர்கள், தமிழர்கள், விதி, கடவுளர்கள் எல்லாம் சேர்ந்து கொன்று போட்டபின் இப்போது வெறும் 6.5 கோடி பேர் மட்டும் தமிழ் பேசுகிறர்கள். இப்போது இந்திய அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை எடுத்து வருகிறது அதில் உண்மைகள் மறைக்கப் படாமல் இருந்தால் எத்தனை பேர் இந்தியாவில் தமிழ் பேசுகிறார்கள் என்று தெரிய வரும். 

Ethnologue: Languages of the World Fifteenth Edition




வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு,  நாம் கோருவது என்ன வென்றால் உங்களது நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 'வீட்டில் பேசும் மொழி என்ன?' என்றால், தமிழ் என்று அச்சப் படாமல் சொல்லுங்கள். தமிழ் பேசுவோரின் உண்மையான எண்ணிக்கையை உலகுக்குக் காட்டுவோம்.

இந்தப் பட்டியலைப் பாருங்கள் தமிழை விடக் குறைந்த எண்ணிக்கையில் பேசும் மொழியை உடையவன் எல்லாம் தனக்கென ஒரு நாட்டை வைத்துள்ளான். தமிழுக்கென்று ஒரு நாடு இந்தப்பூவுலகில் படைக்கப்படவேண்டும் என்பது என் தீராத ஆசை. 

தமிழனுக்கு என்று எவனாவது தனிநாடு கேட்டால் உங்களால் உதவ முடியாட்டாலும் பரவாயில்லை, தடுக்க முயற்சியினைச் செய்யாதீர்கள். 

Thursday, February 24, 2011

தமிழக சட்டமன்றத் தொகுதிகள் ஏலத்துக்கு: கார்ப்போரேட் நிறுவனங்கள் கவனத்துக்கு

தமிழக சட்டமன்றத் தொகுதிகள் ஏலத்துக்கு

கட்சிமாறிகள், கட்சி தாவிகள், கொள்கை மறந்தவர்கள், பதவி வெறியர்கள், காட்டிக் கொடுப்போர், போட்டுக் கொடுப்போர், நம்பிக்கைத் துரோகிகள், எதிரியிடம் சரணடைவோர், இன்னபிற எல்லாம் நாம் MLA ஆகவும், MP ஆகவும் பார்த்திருக்கிறோம். எந்தக் கட்சியும் நம்பும்படி இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.

முன்பு திகவில் இருந்து திமுகவுக்கு மாறினார்கள், திமுகவிலிருந்து அண்ணா திமுகவுக்கு மாறினார்கள், அதெல்லாம் ஓரளவுக்குக் கொள்கை என்று எடுத்துக் கொள்ளலாம். அது ஜனநாயகக் காலம். பிற்பாடு வந்தது பாருங்கள் பணநாயகக் காலம். எவன் எந்தக் கட்சியில் இருக்கிறான் என்று நமக்கும் தெரிவதில்லை, அவனுக்கும் தெரிவதில்லை.

எது ஆளுங்கட்சியோ அதற்குத் தாவும் மக்கள் பிரதிநிதிகள். எல்லாக் கட்சியிலும் இருக்கிறார்கள். யாரும் விதிவிலக்கில்லை. திமுகவிலிருந்து அண்ணா திமுகவுக்கு, அண்ணா திமுகவிலிருந்து திமுகவுக்கு, மதிமுக விலிருந்து திமுகவுக்கு, கம்யூனிஸ்டிலிருந்து திமுகவுக்கு, அண்ணா திமுகவிலிருந்து காங்கிரசுக்கு, இதற்கெல்லாம் எடுத்துக் காட்டு கேட்காதீர்கள். எல்லாம் உங்களுக்குத் தெரியும். பேசிக்கொண்டு போனால் வாய் வலிக்கும் தட்டச்சு செய்தால் கைவலிக்கும்.

உச்சி கவுடரில் ஆரம்பித்து, ஜென்னிபர் சந்திரன், செல்வ கணபதி, சேடப்பட்டி முத்தையா, கம்பம் ராமகிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், எல் கணேசன், திருப்பூர் கோவிந்தசாமி,பேராசிரியர் தீரன், எஸ் வி சேகர் இன்னும் ஏராளமானோர்.

நிற்க, இவர்கள் எல்லாம் கொள்கையின் அடிப்படையிலா மாறினார்கள் என்று நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை பணம். பணம் தான் அய்யா, பணம் தான், எவ்வளவு கொள்ளை அடித்தான் என்று செய்திகளில் பாருங்கள். அதைத் திரும்பச் சொல்லவேண்டாம். தமிழன் பிணத்தின் மேல் உட்கார்ந்து பணம் எண்ணும் ரத்தக் காட்டேரிகள்.
அண்ணா, ஜீவா, ஆசைத்தம்பி, பட்டுக் கோட்டை அழகிரி...என்று வளர்ந்த திராவிடப் பரம்பரையைப் பாருங்கள். இன்றோ பொருக்கி, போக்கிரி, விலைமகள், நடன மங்கை, இன்னும் சொல்லக் கூசும் செயல் செய்யும் தலைவர்கள். அதனால் தான் சொல்கிறேன், கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். கார்ப்பரேட் நிறுவனங்களை அழைத்து தமிழக சட்டமன்றத் தொகுதிகளை ஏலம் எடுக்கச் சொல்லுங்கள். வரும் பணத்தைத் தொகுதி மக்களுக்குப் பிரித்துக் கொடுங்கள். அதிகத் தொகுதியை ஏலம் எடுக்கும் நிறுவனத்திடம் ஆட்சியைக் கொடுங்கள். ஏனெறால் இந்த MP,MLA அனைவரும் காசு வாங்கி கட்சிமாறும் பச்சோந்திகளே.
முந்தைய பதிவில் சொல்லியவாறு தமிழ்நாட்டுக்கு விலை வெறும் ரூ 1950 கோடி தான். ஒரு கிரிக்கெட் கிளப்பின் விலைகூட இல்லை . எவ்வளவு சல்லிசு பார்த்தீர்களா? இந்தக் கட்சிகளும் தொங்கு சட்டமன்றம் வந்தால் விலை பேசத்தான் செய்யும். டபுள் ஏஜண்டுகள் நிறைந்திருக்கும் கூட்டணிதான் பாருங்கள்.

எவனிடம் கொள்கை இருக்கிறது? பணம் ஒன்றே குறி.
எனவே தான் கெஞ்சிக் கேட்கிறோம்,
டாட்டாக்களே, பிர்லாக்களே, பஜாஜ்களே, கோத்தாரிகளே, சேட்டுகளே, பார்சிகளே, பணம் படைத்த பரதேசிகளே வாருங்கள் தமிழ்நாடு எண்ணும் சத்திரத்துக்குத் தாள் போடுங்கள்.

உங்களிடம் பணத்தை வாங்கி கட்சிக்காரங்கள், மற்ற கட்சிக் காரங்களை வாங்குவாங்கள். அதை என் நீங்களே வாங்கக் கூடாது?

இந்திய நிறுவனங்கள் வாங்க வில்லை என்றால், Fortune 500 கம்பெனிகளை அழைத்து உலக டெண்டர் விட வேண்டி வரும்.
பின்கண்டவைகள் உலகின் முதல் பத்துக் கம்பெனிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவைகளிடம் தமிழ் நாட்டை ஒப்படைப்பு செய்ய எங்களுக்கு ஒன்றும் கூச்சம் இல்லை. கிழக்கு இந்தியக் கம்பெனியிடம் இந்தியாவே சரண் அடைந்து இருந்தது என்பதை நாம் அறிவோமல்லவா?

1 Wal-Mart Stores, United States, Retail
2 Royal Dutch Shell, Netherlands, Petroleum
3 Exxon Mobil, United States, Petroleum
4 BP, United Kingdom, Petroleum
5 Toyota Motor, Japan, Automobiles
6 Japan Post Holdings, Japan, Diversified
7 Sinopec, China, Petroleum
8 State Grid, China, Power
9 AXA, France, Insurance
10 China National Petroleum, China, Petroleum

Wednesday, February 23, 2011

தமிழ் நாட்டின் விலை ரூ 1950 கோடி

அம்பானியின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருக்கும்.

அப்படியானால் தமிழ் நாட்டிற்கு என்ன விலை? நமக்கு என்ன விலை?

உங்களுக்கு அரசால் புரசலாக சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். தெரிய வில்லை என்றால் நீங்கள் வருத்தப் பட வேண்டும். மத்தியில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போதெல்லாம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வளவு தொகை கொடுக்கப் பட்டது என்று பத்திரிகைகள் செய்தி வெளியிடும். நாமும் படித்திருப்போம். அதாவது கட்சி மாறி ஓட்டுப் போட அல்லது கட்சி தாவ என்பதற்கு அது. இருக்கட்டும்.

சென்ற பாராளுமன்றத்தேர்தலில் ஒருவர் தேர்தலில் வென்று விட்டார். அவரை எதிர்த்து தோற்றவர் மிகப் பெரும் ஜனநாயகவாதி. ஆனால் அவர் தயவால் தான் பக்கத்து நாட்டில் சொந்த இன மக்கள் மீது படுகொலைகள் சர்வ சுதந்திரமாக நடந்தேறின. அப்படிப் பட்ட கட்சி விசுவாசியை எப்படி மேலிடம் கைவிடும்? வேன்றவரிடம் மன்றாடி மிரட்டி சாம தான பேதம் செய்து வென்றவர் தோற்றதாக அறிவிக்கப் பட்டது. அதற்கு கைமாறியது ஐம்பது கோடி என்று வதந்தி இருக்கிறது. இதை வைத்து தமிழ் நாட்டின் விலையை நாம் நிர்ணயிக்கலாம்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐம்பது கோடி. ஒரு தொகுதிக்கு ஐம்பது கோடி என்றால். முப்பத்தி ஒன்பது தொகுதிக்கு ஓராயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது கோடி. எனவே தமிழ் நாட்டின் விலை, 2009 நிலவரப்படி ரூ 1950 கோடிகள். தமிழ் நாட்டில் மொத்தம் 6.8 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொருவரின் மதிப்பு ரூ 287 ஆகும். நடப்பு நிலவரம் தேர்தல் வந்தாலோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலோ தெரியவரும்.

Saturday, February 19, 2011

டபுள் ஏஜன்ட் ராமதாஸ் வாழ்க!




தமிழ் இன உணர்வு தமிழகத்தில் தலை தூக்காதிருக்க உளவு நிறுவனங்களுக்கு அவர்களது வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் ஒரு டபுள் ஏஜன்ட் வேண்டும். அதற்கு சாதிக்கட்சித் தலைவர்களைப் பயன் படுத்திக் கொள்ள முயற்சி செய்தன. சாதிக்கட்சித் தலைவர்களான ராமதாசும் திருமாவளவனும் அவர்களது சரியான தேர்வானது. 

MGR காலத்தில் திமுகவை பலவீனப்படுத்த ராமதாசை இந்திய உளவு நிறுவனங்கள் பயன்படுத்தின என்பது அனைவரும் உணர்ந்த சேதிதான்.  




ஒரு முறை சுப்பிரமணிய சாமியின் லெட்டர் பேட் கட்சியின் வட இந்திய நிர்வாகி ஒருவன் சொன்னான் தமிழ் நாட்டை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்று. சுப்பிரமணிய சாமி இந்திய உளவு நிறுவனங்களால் தமிழ், தமிழர், தமிழ் நாடு, ஈழம் ஆகியவற்றுக்கெல்லாம் எதிராக ஏவி விடப்படும் நாய் என்பது நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. இவனது கட்சியால் முன்மொழியப் பட்ட தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கும் யோசனையை தமிழ் நாட்டில் சாதிக்கட்சி நடத்தும் ராமதாஸ் வழி மொழிந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தமிழ் ஊடகங்கள் ராமதாசுக்கு டின்னுக் கட்டினதால், மனிதர் அதைக் கைவிட்டார்.  

இவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர்  மத்திய அமைச்சராக இருந்த போது காஞ்சி காம கேடி மடத்திற்கு ஆசி வாங்க அடிக்கடி செல்வார்.  காஞ்சி மடம் பராரிகளின்  மடம் என்பது இவர்களுக்குத் தெரியாதா?

சோனியாவின் கரத்தை வலுப்படுத்திக் கொண்டே ஈழத்தை ஆதரிக்கும் அதிசயப் பிறவி இவர். காங்கிரஸ் இருக்கும் வரை ஈழம் என்றுமே கிட்டாது. 

தன் மகனின் பதவிக்காக தன் சாதிக்காரர்களை எல்லாம் பயன்படுத்தி கட்சி நடத்தும் சாமார்த்தியசாலி இவர். ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறி பதவியைப்  பிடிக்கும் கொள்கை மறவர் இவர். 

இப்போது முப்பத்தி ஒரு தொகுதிகளில் தமிழனை அழித்துச் சிங்களனை வாழவைக்கும் காங்கிரஸ்-கருணாநிதி கூட்டில்  களமிறங்குகிறார்.

அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவை சகோதரி என்று சொல்லி இவர் மீண்டும் அண்ணா திமுகவினருக்குத் தாய் மாமன் ஆவார். 

அப்போதும் இவரது குடும்பத்துக்குப் பதவி கிடைக்கும் இவரது சாதிக்காரர்கள் அப்போதும் இவரை ஆதரிப்பார்களா?

Friday, February 18, 2011

ஈழத் தமிழர்களே கடைசி அனுதாபத்தையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

ஈழத்தமிழர்களை ஆதரிப்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு தேசத்துரோகமாகவே இப்போது பார்க்கப் படுகிறது. இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லர். அவர்கள் இந்திய தேசியத்தைப் பேசும் இந்தியர்கள். ஈழத்தில் தமிழர்களது உரிமையைப் பேசும் போது தங்களுக்கும் உரிமைகள் இருக்கும் என்பதை அறியாது அனைத்தையும் இழந்து நிற்கும் பரிதாபமான ஜந்துக்கள்.

ஈழத்தமிழர்களை தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்துத் தமிழர்களும் ஆதரிக்கவில்லை லட்சத்தில் ஒருவன் தான் ஆதரிக்கிறான். இந்திய சிங்கள உளவுத்துறைகளின் கைகளில் சிக்கி ஈழத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்கள் வடக்கு மாகாணத் தமிழர்கள் என்று பிரிந்து கிடக்கிறார்கள். ஈழத்தில் ஒரு மாகாணத் தமிழன் சாகும் போது இன்னொரு மாகாணத் தமிழன் சிரிக்கிறான். ஆனால் இரண்டு மாகாணத் தமிழர்கள் சாகும் போதும் தமிழ் நாட்டுத் தமிழன் வேதனைப் படுகிறான்.

தேசத்துரோகமாகவே கருதப் பட்டாலும், தமிழ் நாட்டில் இருக்கும் தமிழன் ஈழத்தை ஆதரித்தான். வைகோ,சீமான், நெடுமாறன், இன்னும் ஏராளமானோர் சிறை சென்றனர். முத்துக்குமார் போல பலர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் இந்திய சிங்கள உளவுத்துறைகளின் ஏவலுக்கு அடிபணிந்து தமிழக மீனவர்கள் மீது ஈழ மீனவர்கள் தாக்குதல் நடாத்துகிறார்கள். இது கொஞ்சமும் சகித்துக் கொள்ள இயலாது.

இது தொடர்ந்தால் இதைத் தடுத்த நிறுத்த வேண்டியது ஈழத் தமிழர் தலைவர்களின் பொறுப்பு, இல்லையேல் தமிழகத்தில் உங்கள் மீது வெறுப்பு தான் வரும்.

இதுவரை ஐநூறு தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுத் தள்ளி இருக்கிறது. அத்தனை கணக்கையும் ஈழ மீனவர்கள் மேல் போட இரு நாட்டு உளவு அமைப்புகளும் முயற்சி செய்யும். முட்டாள் ஈழ மீனவன் அந்தப் பழியை வாங்கிக் கொள்வான். தமிழகத்தில் எஞ்சி இருக்கும் ஈழ ஆதரவு அற்றுப் போகும்.

ஒரு முறை பெரியார் சொல்லியது சரியென்று படுகிறது , "தமிழன் காட்டு மிராண்டி".