Friday, January 28, 2011

வெளியுறவுச் செயலாளர் கற்பழிக்கப் படாமல் திரும்பி வந்தால் அது வெற்றி!




தமிழ் பேசும் மீனவர்களைக் கொல்லாதே என்று சிங்களன்களிடம் கெஞ்ச வெளியுறவுச் செயலாளர், கொழும்பு செல்கிறாராம். இவர்கள் சொல்லுவார்களாம் அவர்கள் கேட்பார்களாம். நம்புவோமாக. இருந்தாலும் எனக்குள்ளே ஒரு உறுத்தல் என்ன வென்றால்எந்தச் சிங்களனாவது இந்தப் பெண்ணைக் கற்பழிக்காமல் இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் அதை ஒரு வெற்றியாகவே நான் கருதுவேன்.

மார்க்சிசம் பேசும் மாபாவிகள்



தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப் பட்டதற்காக ஊர்வலம் போனார்கள் தமிழ் நாடு மார்க்சிஸ்டுகள். புல்லரிக்கிறது. இவர்களது பாசம். ஈழத்திலே இனக்கொலை நடந்த போது உள்நாட்டுப் பிரச்சினை என்று தப்பித்துக் கொண்டவர்கள். 

ஏன்? சீனா சிங்களனின் கூட்டாளி இவர்கள் சீனாவின் புகழ்பாடிகள்.  
போகட்டும்...இவர்கள் பிற நாட்டு உள்விவகாரங்களில் தலையிடமாட்டார்கள். ஆனால் சிரியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் பாலஸ்தீன விடுதலை ஆதரவு மாநாட்டுக்கு மட்டும் போவார்கள். இஸ்ரேலை எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள். அது மட்டும் உள்நாட்டு விவகாரம் இல்லையாம். 

சே குவாரா சொன்னான், "எந்த ஒரு அநீதியைக் கண்டபோதும் ஆத்திரத்தால் அதிர்ந்தீர்களானால்,    நீங்கள் ஏன் தோழன் ஆவீர்கள்." ஈழத்து அநீதியை இவர்கள் கண்டு கொள்ளவில்லை. பாலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்கிறார்களாம். இன்று தான் தமிழக மீனவன் கொல்லப் பட்டானா? இது வரை யாருமே சாகவில்லையா? தேர்தல் வரும் தங்களது இருப்பினைக் காட்டியாக வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இப்போது.

சீன ஜால்ராவான மார்க்சிஸ்டுகள், இவர்களின் தலைவர்கள் எல்லாரும் மலையாளிகள் வங்காளத்தான்கள். வங்காளத்தான்கள் பங்களாதேஷ் வாங்கிக் கொடுத்தான்கள் ஈழத்தைத் தடுத்து விட்டான்கள். தமிழகத்தில்  கடல் சார் பல்கலைக் கழகம் அமைய வேண்டும் என்றதற்கு பார்லிமெண்டில் சட்டமாக்க முடியாமல் அறிக்கையைக் கிழித்த நாசகாரர்கள். பாசம் பொங்கும் வீதி நாடகம் ஒன்றை நேற்று சென்னையில் நடத்தினார்கள். கேவலம்.

ஜெயேந்திரன் (சங்கராச்சாரி) கைதுக்கு கண்டனம் தெரிவித்த அறிவு ஜீவிகள். இதை ஏன் செய்தார்கள்? லங்கா ரத்னா விருது வாங்கிய (The Hindu News Paper (Also called Mount Road Maha Vishnu)) ராமுக்கு காஞ்சி மடத்தில் செல்வாக்கு. ராம் தன்னை மார்க்சிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் கபடதாரி. போகட்டும் அது மட்டுமா? ஜெயேந்திரன் திபெத் சீனாவின் ஒரு பகுதி என்று சொன்ன அரசியல் புரோக்கர். சீனாவுக்கு ஆதரவான ஜொள்ளு சாமியார் கைதைக் கண்டிக்காமல் விட்டால் எஜமான் சீனாவுக்கு வருத்தம் வரும் அல்லவா?

பதினாறு வயதில் கம்யூனிசம் அறுபது வயதில் ஆன்மிகம் இது இயற்கையாக சிந்திக்கத் தெரியும் மனிதனிடத்தில் வரும் சிந்தனை. தயவு செய்து உங்களுக்கு கம்யூனிச சிந்தனை வந்தால் மார்க்சிஸ்டுகள் பக்கம் போகாதீர்கள். தா.பாண்டியன் போன்ற ஈழ ஆதரவு கம்யூனிஸ்டுகளை ஆதரியுங்கள். மார்க்ஸ் ஆத்மா சந்தோசப் படும்.

Tuesday, January 25, 2011

ஜனவரி 26 சுதந்திர தின வாழ்த்துக்கள்.



தலைப்பைப் பார்த்ததுமே கடுப்பாகியிருப்பீர்கள் குடியரசு தினத்துக்குப் பதிலாக சுதந்திர தினம் என்று சொல்கிறானே சாவு கிராக்கி என்று. இதில் ஒன்றும் குற்றமில்லை சுதந்திரதினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் மேடையில் ஓர் இந்தியப் பிரதமரே பேசி இருக்கிறார். அவருக்கு பாரத ரத்னா விருதையும் கூடக் கொடுத்திருக்கிறார்கள். அவர் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்கு மட்டும் நான் சொல்கிறேன்.

ராஜீவ் காந்தி, ராஜீவ் காந்தி என்று (இருவர் அல்ல) ஒருவர் இருந்தார். அவர் தானுண்டு தன் ஏரோப்ளேன் உண்டு என்று இருந்தார். விதி யாரை விட்டது? சஞ்சய் காந்தி செத்ததனால்  அரசியலுக்கு வந்து, இந்திரா காந்தி இறந்ததினால், பதவிக்கு வந்தவர். ஆட்சியில் இருக்கும் போது ஏதாவது ஒரு மாநில அரசைக் கலைப்பதில் ஆர்வமாக இருப்பார். தமிழ் நாட்டு ஆட்சியைப் பிடிக்கப் படாத பாடு பட்டார். செத்தும் முடியவில்லை. சரி அதைப் பிறகு பார்ப்போம். ஒரு முறை தமிழ் நாட்டுக் குடிசை ஒன்றுக்கு வருகை தந்த போது,  "தொட்டிலில் தூங்குறது யாரு குழந்தையா?", என்று கேட்ட மாமேதை. இரவு உடையில் பொது மேடைக்கு வந்தவர். உலகத்தில் எந்த நாட்டுப் பிரதமருக்கும் கிடைக்காத மரியாதையை சிங்களர்கள் கொழும்பில் ராணுவ அணிவகுப்பில் இவருக்குக் கொடுத்தார்கள். உலகத்தில் பிற நாட்டு ராணுவ வீரனிடம் அடிவாங்கிய ஒரே பிரதமர், என்ற பெருமை இவருடையது. மேற்கண்ட காணொளியில் இதைக் காணலாம்.  அந்த அடிக்குப் பயந்தோ என்னவோ சிங்களர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார். கடைசிவரை தான் தமிழர்களுக்கு அநீதி இழைத்துவிட்டோம் என்பது தெரியாமலேயே இறந்து விட்டார். இன்னும் இவர் கட்சியில் இருப்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். இவரை விடக் கொடூரமான முறையில் தமிழர்களை அழித்தார்கள், அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இவ்வாறாக இருப்பதனால் ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட் 15  இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத எனக்கும் பாரத ரத்னா தரலாம் தப்பில்லை.


Monday, January 24, 2011

தமிழர் தலைவரின் அடுத்த நாடகம்.



தமிழர் தலைவர் பதவியை விட்டு விலகுவேன் என்று அளந்திருக்கிறார். படித்ததும் சிரிப்புத்தான் வந்தது. இதே ஸ்டண்டை எத்தனை முறை அடிப்பது. இந்தப் பதவிக்குத் தானே தன் இனம் அழிவதை வேடிக்கை பார்த்தார். எதிரியுடன் குலாவி ஒரு லட்சம் தமிழர்கள் கொலைக்குத் துணை  போனார். யாராவது போராட்டம் செய்தால் ஆட்சியைக் கவிழ்க்க சதி என்று கூப்பாடு போட்டார். இன்னும், நாளும் ஒரு மீனவன் சிங்கள நாய்களால்  கொல்லப்படுகிறான், ஒப்புக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதி விட்டு வராத கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார்.

இந்த தமிழர் தலைவர் அமைதியாக இருந்து விட்டதால் ஒட்டு மொத்த உலகமும் நமக்கேன் என்று இருந்து விட்டது.

உங்களுக்கெல்லாம் தெரியும் திருமணத்துக்கு முன் மாப்பிள்ளைகள் காசி யாத்திரை செல்லும் சடங்கு, ஒரு சில பிரிவினரிடையே இருக்கிறது. அங்கே மாப்பிள்ளையும் காசிக்குப் போக மாட்டான், மாமனாரும் விடமாட்டான்.அதே காமெடி தான் இங்கேயும். இந்த தலைவரும் விலக மாட்டார், தொண்டரடிப் பொடிகளும் விடமாட்டார்கள்.

வேண்டுமானால் பாருங்கள் இந்த வேடிக்கையை எதிர்த்து சிலர் உண்ணாவிரதம், தீக்குளிப்பு, மறியல், தந்திகள், என்று ஏராளமாக இருக்கும்,(அப்படி இல்லை என்றால் தலைவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று அர்த்தம்.)

ஆகவே நீங்கள் இந்த ஸ்டண்டை பொருட்படுத்தாமல் உங்கள் வேலையைப் பார்க்கலாம்.

Saturday, January 22, 2011

வலைப்பதிவர்களே தமிழுக்குச் சேவை செய்தது போதும்! தமிழருக்குச் சேவை செய்ய வாருங்கள்!


கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தும் முன் தோன்றிய மூத்த குடி,  தான் குடியிருந்த அனைத்து இடங்களையும் இழந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் எதிர்ப்பின்றி சரணடைந்து ஓடி ஓடி களைத்து இப்போது வாழ்வதற்கே இடமில்லாமல் சொந்த மண்ணிலே தொலைந்து போய் நிற்கின்றான்.  இது எதோ ஈழத்தில் நடந்ததை நான் சொல்வதாக நினைத்து நீங்கள் பொருட் படுத்தாமற்  செல்ல வேண்டாம். 

சிந்து சமவெளி வரை வாடமேற்கில் பரவி இருந்த நம் இனம் ஆரியர் வருகையினால் அனைத்து வடபாதி இந்தியாவையும் வந்தேறிகளுக்கு விட்டு விட்டு அடிமை ஆகினர். மீதம் தெற்கில் இருந்த இனமும் இனக்கலப்பினால்  வெவ்வேறு மொழிக்குடும்பம் ஆகினர். முதலில் கன்னடம் பிரிந்தது, பிறகு தெலுங்கு பிரிந்தது, கடைசியாக மலையாளமும் பிரிந்தது. சரி இது பரிணாம வளர்ச்சி என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் பிரிந்த இந்த மொழியினர் பிரித்து வைத்த மொழியினரை தங்களது உறவினராகவும் தாய்த் தமிழை கேவலமாகவும் நினைக்கும் மன நிலைக்கு வந்து விட்டனர். 

ஒருமுறை  மலையாள மனோரமா ஆங்கில  year book இல் திராவிட மொழிகளில் மூத்த மொழி கன்னடமா இல்லை தமிழா என்று இன்னும் முடிவு செய்ய முடியாமல் உள்ளது என்பது போல்   எழுதி இருந்தனர். (அதற்காக அதைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டாம். ஓசியில் கிடைத்தால் படிக்கலாம்.)

தமிழன் என்று இருப்பவனது அடையாளங்களை பிற மொழியினரும் இனத்தினரும் ஒவ்வொன்றாகச் சிதைத்து வருகின்றனர். தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதி கொடுத்ததற்கு அனைத்து மொழிகளுக்கும் அத் தகுதியினை அளிக்க வகை செய்வது போல தகுதி வரம்பைக் குறைத்து விட்டனர். பதவி வெறி கொண்ட தமிழக அரசியல் வாதிகளைக் கொண்டு தமிழனின் அடையாளத்தை ஈழத்தில் அழித்து விட்டனர். இப்போது தமிழ் நாட்டிலும் அரங்கேற்றி வருகின்றனர். 

ஈழத்தில் செத்தவனுக்காக கலங்கினால் தேச விரோதி என்று கூப்பாடு போட்டு சிறையில் அடைக்கிறார்கள். சிறை சென்றவனைப் பார்க்கச் செல்பவனை தடா பொடா என்று காட்டுமிராண்டிச் சட்டங்களால் உள்ளே தள்ளுகிறார்கள். 

நீதி மன்றத்தில் வழக்கு நிற்காது என்று தெரிந்தே இந்த மாதிரியான பிரிவுகளில் கைது செய்கிறார்கள். சிறையில் பட்ட கஷ்டம் மிச்சம் என்பதற்காக. தமிழன் எங்கே சென்றாலும் கேவலம் அடைகிறான். போகாதே என்று சொன்னாலும் ஐயப்பன் மலைக்குச் சென்று சாகிறான். சாக வில்லை என்று சொன்னாலும் மலையாளிகளிடம் செருப்படி வாங்குகிறான்.

தமிழைக் காப்பாற்ற ஏராளமான வலைப்பதிவர்கள் தற்போது களம் இறங்கி இருக்கிறார்கள். மகிழ்ச்சி, ஆனால், இன்னும் பத்தாண்டுகளுக்குள் தமிழ் பேச யாரும் இருக்க மாட்டார்களோ என்ற எண்ணம் எனக்குள் குடைகிறது.  

ஏன் சொல்கிறேன்?

தினமும் தமிழ் நாட்டு மீனவர்கள் கடலில் கொல்லப்படுகிறார்கள். முதல்வரும் முரசொலிக்கு ஒன்றும் பிரதமருக்கு ஒன்றும் கடிதம் எழுதி விடுகிறார். சாகிறவன் செத்துக் கொண்டே இருக்கிறான். விரைவில் தமிழ் பேசும் மீனவர்கள் முற்றாக அழிக்கப் பட்டு விடுவார்கள். அல்லது வேறு வேலைக்குப் போய் விடுவார்கள். இவர்களைப் பற்றி எந்த அரசும் கவலை கொண்டதில்லை. அதே போல்தான் மீதமுள்ள தமிழனையும் கோழைகளாக்கி அழித்து விடுவார்கள். தன் இனம் சாகின்ற போது சொரனையே இல்லாமல் கிரிக்கட் பார்க்கும் கோழைகள். 

அய்யா நான் உணர்ந்து கொண்டதெல்லாம், தமிழைக் காப்பாற்றிய வரை உங்களது முயற்சி பாராட்டுக் குரியது. அதே போல தமிழனையும் காப்பாற்ற வாருங்கள். அனைவரும் எதோ ஒரு வகையில் இனத்தினைக் காப்போம், இழந்த பெருமையை மீட்டெடுப்போம். 

 நமக்குள் ஆயிரம் பேதங்கள் இருக்கலாம், போட்டிகள் இருக்கலாம், பொறாமைகள் இருக்கலாம், நாம் தான் இந்த உலகத்தில் இப்போது இருக்கும் தமிழர்கள், நாம் கூட இதைச் செய்ய வில்லை என்றால், முரீசியசில் அழிந்து போன டோடோ பறவையைப் போல நம் இனம் நம்முடனே அழிந்து விடும். நம் இனம் இந்த உலகம் உள்ள மட்டும் நிலைத்து இருக்க வேண்டும். வாருங்கள் ஒன்றாவோம். தமிழினத்தை ஆதரிப்போம் காப்போம். 

உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறுங்கள். சேர்ந்து செயல் படுவோம்.

மதம் மாறுபவன் முட்டாள்! மதம் மாற்றுபவன் அயோக்கியன்!!



கடவுள் இருக்கலாம் இல்லாமலும் போகலாம், ஆனால் இவரை வைத்து நடத்தப் படும் விளையாட்டுகளுக்கு அளவே இல்லை. திருவாரூர் தங்கராசு அவர்கள் ரத்தக் கண்ணீரில் எழுதியதைப் போல, ஊரூருக்கு ஒரு தலைவன், ஆளாளுக்கு ஒரு கொள்கை, அவனவனுக்கு ஒரு டஜன் பட்டினிப் பட்டாளம்...

நாடு நாட்டுக்கு ஒரு மதத் தலைவன் உருவாகி மதம் வளர்த்தினார்கள். அதை நாடு கடந்து பரப்பினார்கள். உலகத்தில் உள்ள  முட்டாள் மக்கள் மதம் மாறி ஏற்றுக் கொண்டார்கள். எந்த ஒரு புது மதமும் தோன்றிய இடத்துக்கு அப்போதைய சூழ்நிலைக்கு அந்த அந்தக் காலத்துக்கு மட்டுமே ஏற்றது என்பது என்கருத்து. அதை விடாமல் பின்பற்றி அதற்காக சண்டை போட்டு வெடி குண்டு வைத்து தற்கொலை செய்து  பிறரையும் கொன்று ஊனமாக்கி, நாடு நகரை எல்லாம் சின்னா பின்னமாக்கி சீர்கெடுத்து  அப்பப்பா, என்ன கொடுமைடா இது. 

மதம் மதத்துக்கு ஒவ்வொரு சம்பிரதாயம், என் மதத் தலைவனைப் பார்த்து நீ சிரித்தாய் உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் பார் என்று மரண தண்டனை விதித்து மதப் பற்றைக் காட்டிக் கொள்ளும் காட்டு மிராண்டிகள்... 

மதத்திலே சொல்லப்பட்டது என்று சான்று கூறி கற்பழித்த மாமனாருக்கு மருமகளைக்  கட்டிவைத்து, கணவனை இனி நீ மகன் என்று தான் கூற வேண்டும் என்று தீர்ப்பு சொல்லும் மதவாதிகள். தாழ்ந்த சாதிக்காரனை தீயில் குளித்து கோயிலுக்குள் வா என்று சொன்ன தீட்சிதன்கள்.ஊமைகளைப் பேச வைக்கிறார் முடவர்களை நடக்க வைக்கிறார் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி வெளிநாட்டுப் பணத்துக்கு உள்ளூர் மக்களை விற்கும் மதம் மாற்றிகள், பார்க்கப் பார்க்க நெஞ்சம் கொதிக்கிறது. 

மதம் மாறுவோர் பலவிதம் , பருவக்கோளாறில்  எவளோ ஒருத்தியிடம் மயங்கி அவள் சொன்னாள் என்று மதம் மாறும் அப்பாவிகள், சாகக் கிடக்கும் அப்பாவிமக்களிடம் அரசு மருத்துவ மனைக்குச் சென்று இன்ன கடவுளைக் கும்பிடு எழுந்து வருவான் நோயாளி என்று மூளைச் சலவை செய்து மதம் மாறவைத்து வேறு இடுகாட்டில் நோயாளியைப் புதைக்க வைக்கும் மத ஏஜென்ட்கள், இந்த மோசடிக்காரர்கள் எல்லாம் சுத்தமான உடை உடுத்தி இருப்பார்கள், முழுக்கை சட்டை அணிந்து பேண்டுக்குள் இன் செய்து இருப்பார்கள். கையில் மதப் புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு கழுத்தில் மதச் சின்னம் அணிந்து இருப்பார்கள்.  இங்கே மதம் மாறியவனுக்கு இடு காடுதான் மாறியதே தவிர முடிவு ஒன்று தான், ஆனால் அவன் ஏமாற்றப் பட்டதை உணர்வதற்குள் அவன் இருந்து விட்டான். ஐயோ பாவம். 

இன்னும் பிற நாட்டுக்கவோ மக்களுக்காகவோ சாகாமல் மதத்துக்காகச் சாகும் மனநிலை பாதிக்கப் பட்ட இளைஞர்கள். இவர்களுக்கு மூளைச் சலவை செய்யப் படும் விதம் அலாதியானது, "நீ மதத்துக்காக தற்கொலைப் படையில் சேர்ந்து உயிர் விட்டால், சொர்க்கத்துக்குப் போவாய். அங்கே கடவுள் வாசலில் நின்று உன்னை வரவேற்பார். சொர்க்கத்தில் 72  கன்னிப் பெண்களுடன் உடல் உறவு கொள்ளலாம். ......" என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறுவார்கள். செத்த பிறகு இதெல்லாம் கிடைக்க வில்லை என்று வந்து கேட்கவா போறான்?

எனக்கு ஒரு சிறு சந்தேகம், எல்லா மதத்திலும் சொர்க்கத்தில் கன்னியருடன் குலாவுவதையே சொல்கிறார்களே சொர்க்கம் என்பது என்ன சிவப்பு விளக்குப் பகுதியா? சோம பானம் சுறா பானம் எல்லாம் சொல்கிறார்களே அங்கே என்ன டாஸ்மாக் பாரா இருக்கிறது?
அப்படியானால் சொர்க்கத்துக்குப் போய் அதை எல்லாம் அனுபவிப்பதை விடுத்து இங்கேயே அதை அனுபவித்தால் என்ன? இங்கேயும் சிவப்பு விளக்குப் பகுதிகள் இருக்கிறது, டாஸ்மாக் பார்கள் இருக்கிறது. அப்படியானால் சொர்க்கமும் இங்கே இருக்கிறது என்று தானே அர்த்தம். இங்கே நீங்கள் சென்றால் ஒருவேளை கடவுளைக் கூடச் சந்திக்க நேரிடலாம்!

மதம் மாறியவர்கள் அலட்டிக் கொள்வதைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வரும். எதோ கடவுளின் காம்ப்லக்சிற்குள் குடிபெயர்ந்து விட்டவர்களைப் போல இவங்கள் நடத்தும் நாடகங்கள் ஐயோ பாவம் என்று தோன்றும்,  அட பாமரனே!


முடிவாகச் சொல்கிறேன் மதம் மாறினால் செத்த பிறகு புதைக்கப் போகும் சுடுகாடோ இடுகாடோ தான் மாறும் மற்றபடி நிலைமை ஒன்றுதான் மானிடா!

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக வழிகாட்டுமாறே !"

Thursday, January 20, 2011

எல்லோரும் நாத்திகரே!



கடவுளை நம்புகிறவர்கள் எல்லாம் நம்பாதவர்களைப் பழிப்பது, "நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவன்", என்று. நாத்திகம் என்றால் தந்தை பெரியார் மட்டுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும். என்னைப் பொறுத்த அளவிற்கு இந்தியாவில் அனைவரும் நாத்திகரே.


உங்களுக்கு இதை நான் விளக்குகிறேன்.

இந்தியாவைப் பொறுத்த அளவிற்கு மூன்று மதங்கள் உள்ளன. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம். இவைகள் மூன்றும் சேர்ந்து சொல்லும் கடவுளைப் பற்றிய விளக்கங்கள் 100% எனக்கொள்வோம். இந்து மதத்தை நம்புபவர் பிற மதத்தை நம்பமாட்டார். அப்படியானால் இவர் 33% மட்டும் கடவுளை நம்புகிறார். மீதி 66% இவர் கடவுளை நம்பவில்லை. அதாவது பிற மதங்களின் விளக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இவர் 66% நாத்திகர் ஆகிறார். அடுத்து முஸ்லிம் இவர் 33% மட்டும் கடவுளை நம்புகிறார். 
அதாவது தன் மதம் என்ன  சொல்கிறதோ அதை மட்டும் நம்புகிறார். பிற மதங்களை, அவர்களது விளக்கங்களை இவர் ஏற்றுக் கொள்வதில்லை. இவரும்   66% நாத்திகர் ஆகிறார். இவ்வாறே கிறிஸ்தவரும்.


அதாகப்பட்டது, எந்த ஒரு தனிமனிதனும் இந்தியாவைப் பொறுத்த அளவிற்கு நாத்திகன் இல்லாமல் இல்லை. எனவே இனிமேலாவது பிற மதங்களை நம்பமறுக்கும் பகுத்தறிவைத் தன் மதத்தில் இருக்கும் கட்டுக் கதைகளைப் பற்றி, கொஞ்சமாவது சிந்தித்து தெளிவாகிக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


"கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக."

Tuesday, January 18, 2011

ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கவச உடை



தமிழர்களின் வீர விளையாட்டு, உலகமே வியந்து பார்க்கும் மிக ஆபத்தான விளையாட்டு, பொங்கல் வந்தாலே தினவெடுத்த தோள்கொண்ட  எம்மின 
வீரர்கள் புறப்பட்டு விடுவார்கள் காளைகளை அடக்க.

வீரம் செறிந்த தமிழர் வரலாற்றினை அறியாத மூடர்கள் தீர்ப்புரைக்கிறார்கள் இது காட்டுமிராண்டித்தனமென்று. காளையை அடக்குவது காட்டுமிராண்டித்தனம் என்றால், உணவுக்காக பிற உயிர்களை கொல்வது எந்த வகையில் நியாயம்? மீன் பிடிக்கக் கூடாது, கோழிக்கறி கூடாது, ஆட்டுக் கறி கூடாது, மாட்டுக் கறி கூடாது, இன்ன பிற புலால் வகை உணவுகள் கூடாது. இதை எல்லாம் மூக்கு முட்டத் தின்று கொண்டு தீர்ப்பு எழுதும் நாகரீக மனிதர்களைக் கேட்கிறேன் கசாப்புக் கடைகளை மூடிவிட்டு ஜல்லிக்கட்டை நிறுத்தச் சொல்லுங்கள். சரி நம் நோக்கம் அதுவல்ல. 

இது இன்று நேற்று நடப்பதல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் ஒப்பற்ற விளையாட்டு. இதன் பெருமைகள் நூறாயிரம் இருக்கும். அதை எல்லாம் நீங்கள் ஏற்கனவே தெரிந்திருப்பீர்கள். ஏனென்றால் இதைப்பற்றித் தெரியாதவர் தமிழர் அல்லர். 

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மஞ்சு விரட்டு நடக்கும் போதும் நான் வேதனைப் படுவதெல்லாம், இவ் விளையாட்டில் காயமடையும் வீரர்களும் வீரமரணம் அடையும் வீரர்களையும் பற்றியே. 

கிரிக்கெட் விளையாட்டிலும் உயிரிழப்புகள் நடந்துள்ளன, கால்பந்து விளையாட்டிலும் உயிரிழப்புகள் நடந்துள்ளன, உயிரழப்புகளை நியாயப் படுத்த நான் இதை எழுத வில்லை.   உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

விளையாட்டுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முக்கியம், அப்பொழுதுதான் அது விளையாட்டு, இல்லை என்றால் அது தண்டனை. ஒரு நாள் கூத்துக்காக இன்னுயிரை எல்லாம் விடக் கூடாது. கூரான கொம்புகள் கொண்ட காளைகளை அடக்க வெறும் கையும் பாதுகாப்பற்ற உடைகளையும் அணிந்து எம்மின வீரர்கள் பாயும் போது, ஒவ்வொரு முறையும் நான் செத்துச் செத்துப் பிழைக்கிறேன்.

கிரிக்கெட்டில் காலுக்குப் பேட் (Pad) , Kidney Cap, Helmet, Chest Pad, போன்ற பாதுகாப்பு அணிகலன்கள் உள்ளன, அது போல மாடு பிடி வீரர்களுக்கும் தகுந்த கவசங்கள் வேண்டும். வீரர்களது நெஞ்சு, வயிறு, கழுத்து, ஆண் குறி, இவைகளை காளைகளின் தாக்குதலில் இருந்து  பாதுகாக்க வேண்டும். இதை தகுதி வாய்ந்த வல்லுநர்கள் வடிவமைக்க வேண்டும். இந்த வகை உடைகளை அரசே வீரர்களுக்கு வழங்க வேண்டும். விபத்துக்களைத் தவிர்ப்பது முக்கியம். விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரண நிதியிலிருந்து லட்சம் லட்சமாகக் கொடுப்பதை விட இது சிறந்ததாகும் என நினைக்கிறேன். 

மேலும், இவ்வீரர்களுக்கு காப்புறுதி செய்து கொடுக்கலாம். விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கிருந்த தற்காலிகமான காப்புறுதித் திட்டம் போல. 

எத்தனை எத்தனை தனியார் நிறுவனங்கள் கோடி கோடியாக கிரிக்கெட்டுக்குக் கொட்டிக் கொடுக்கின்றன, ஆர்வலர்கள் அவர்களை அணுகி இந்த வகை உடைகளை இலவசமாகக்  கோரிப்பெறலாம்.
   
இதை ஏன் நான் சொல்கிறேன்?

ஏனென்றால் எந்தத் தமிழன் கயமடைந்தாலும் எனக்கும் வலிக்கும். உங்களுக்கு?

Friday, January 14, 2011

செம்மொழி


தமிழுக்குச் செம்மொழித்  தகுதி   கிடைத்த பிறகு எல்லா மொழிக்காரனுகளும் தங்களோட மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். தமிழுக்கு எல்லாத்தகுதியும் இருந்தும் இந்திய யூனியன் அரசால் இவ்வளவு ஆண்டுகள் தாமதப் படுத்தப் பட்டது. மொழி வல்லுனர்கள், பொதுமக்கள், ஆர்வலர்கள் எல்லாம் பல்லாண்டுகள் போராடி இறுதியில் 2004 ஆம் ஆண்டில் தான் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் பட்டது. செம்மொழிக்கான வரை முறையை இந்திய யூனியன் அரசு வேண்டுமென்றே தற்போது தளர்த்தி விட்டது. ஆனால் கன்னடம், தெலுங்கு ஆகியவற்றிற்கு கேட்ட உடனே செம்மொழித் தகுதி வழங்கப் பட்டது.  தற்போது தமிழை விட தகுதி குறைந்த  பிற மொழிகள் எல்லாம் செம்மொழி என்று அறிவிக்கப் பட்டுவிடும் போல இருக்கிறது. காரணம் அரசியலும் அரசாங்கத்தின் அப்பிரிவில் இருக்கும் உயர் அதிகாரிகளும். இன்னொரு காரணம் தமிழ் மட்டுமே செம்மொழி அல்ல என்றும்  சொல்ல வேண்டும்.  

சரி இருக்கட்டும் நம் பங்குக்கு நாமும் கேட்போம் 

Basic, FORTRAN, COBOL, Pascal, ALGOL, C, C++, HTML, XML, அப்புறம் Assembly Language மற்றும் இன்ன பிற மொழிகள் எல்லாம் செம்மொழி என்று அறிவிக்க வேண்டுமாய் அன்பும் பண்பும் பொங்கக் கேட்டு வைப்போம். 

இந்தியாவில் இஸ்லாத்திற்குப் பலியான முதல் ஆள் தமிழன்.


தமிழனின் பெருமைகள் ஒன்று இரண்டல்ல சொல்வதற்கு கோடிக்கணக்கில் இருக்கிறது. சொல்லாமல் விடப்பட்ட பெருமைகளை மட்டும் நான் சொல்கிறேன்.

மலையாளிகள் எல்லாம்  தமிழர்களாய் இருந்த ஏழாம் நூற்றாண்டில், கொடுங்களூர் என்ற சேர நாட்டுச் சிற்றரசினை சேரமான் பெருமான் என்ற சற்றே  மனநிலை பாதிக்கப் பட்ட மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு மாலை நேரத்தில் மப்படித்துவிட்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே நிலா ஒன்று தெரிந்தது, கொஞ்ச நேரத்தில் அது பிளந்து மறுபடியும் ஒன்றாக அவன் கண்ணுக்குத் தெரிந்தது. அவனுக்குப் பைத்தியம் தலைக் கேறியது. தனது அரசவையில் இருந்த அனைத்து சோதிடர்களையும் அழைத்தான், அனைத்து சோதிடர்களும் வந்தனர். அனைவரிடமும் மன்னன் கேட்டான், "ஏன் நிலா பிளந்தது? மறுபடியும் ஏன் ஒன்றானது? ". இவனது மனநிலையை அறிந்த அவர்கள் இந்தக் கிறுக்கனுக்கு என்ன சொல்வது என்று யோசித்து ஆளுக்கொரு ரீல் விட்டனர். இதில் எல்லாம் மன்னனுக்கு திருப்தி ஏற்படவில்லை. மன்னனோ இதற்கு பதில் உடனே கிடைத்தாக வேண்டும் என்று தையா தக்கா என்று குதித்தான். இவனை எப்படி சமாளிப்பதென்று அனைவரும் யோசித்தனர்.


இதற்கிடையில் இலங்கை செல்வதற்கு வந்த அரேபியா வணிகர்கள் வரும் வழியில் சேர நாட்டுக்கு வருகை தந்தனர். மன்னனது பிரச்சனையைக் கேள்விப் பட்டனர். புரிந்து கொண்டனர். உள்ளூரிலேயே குப்பை கொட்டுபவர்களை விட நாடு விட்டு நாடு வந்து வணிகம் செய்யும் அவர்கள் புத்திசாலிகளாக இருந்தனர். சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டனர். மன்னனிடம் வந்து இது இறைவனின் விளையாட்டு, இதைப் பற்றி இன்னார் இன்ன இடத்தில் இன்ன உபதேசத்தில் இன்னபடி சொல்லி இருக்கிறார்கள் என்று கதை அளந்தனர்.

எப்போதுமே தமிழனுக்கு உள்ளூர்க்காரனை விட வெளியூரில் இருந்து வந்து கதை அளப்பவனைக் கண்டால் பிடிக்கும். சேரமான் பெருமானுக்கும் இது பிடித்துப் போயிற்று. தான் உடனே மெக்கா வருகிறேன் என்று ஆரம்பித்து விட்டான். அரேபியா வணிகர்கள், தாங்கள் இலங்கை போய் வந்தபின் கூட்டிச் செல்வதாக உறுதியளித்து விட்டு சென்றனர். திரும்பி வருவதற்குள் மன்னன் நாட்டைக் கூறு போட்டு தன்னுடைய அடிப் பொடிகளுக்கு எல்லாம் பிரித்துக் கொடுத்துவிட்டு மதம் மாறிக் கொண்டு  புனிதப் பயணம் மேற்கொள்ளத் தயாரானான்.

அரேபியர்கள் இலங்கையில் இருந்து திரும்பி மன்னனைக் கூட்டிக் கொண்டு கிளம்பினர்.

அப்புறம் மற்ற கதையைப் பார்ப்போம். நாடு மன்னன் இல்லாததாலும் புதிய சிற்றரசர்களாலும் சின்னா பின்னம் ஆனது. மக்களும் வெறுத்துப் போயினர். பழைய கிறுக்கனே பரவாயில்லை என்று நினைக்க ஆரம்பித்தனர். அவன் வந்தால் தேவலாம் என்று இருந்தனர். ஆனால் ரொம்ப நாள் கழித்து மன்னனிடம் இருந்து கடிதங்களை அரேபியர்கள் கொண்டு வந்தனர். மன்னன் திரும்பும் போது பாதிவழியில் இறந்து விட்டதாகவும் ஆனால் கடிதம் கொடுத்ததாகவும் சொல்லி கடிதங்களைக் காட்டினர். அதில் அரேபியர்கள் மசூதி கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப் பட்டு இருந்தது. அதன் படி கொடுங்களூரில் சேரமான் பெருமான் மசூதி கட்டப் பட்டது. அது இன்றும் கொடுங்களூரில் இருக்கிறது. அதற்கு அப்துல் கலாம் கூடச் சென்று வந்தார். நீங்கள் கூடப் படித்து இருப்பீர்கள்.

மேற்கண்ட விவரத்தில் இருந்து நீங்கள் யூகித்து இருப்பீர்கள், அரேபியர்கள் மன்னனை மிரட்டி கடிதம் வாங்கிக் கொண்டு அவனைக் கொன்று போட்டிருப்பார்கள் என்று. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

இவ்வாறாக இந்தியாவில் இஸ்லாத்துக்குப் பலியான முதல் ஆள் தமிழன் தான் என்ற பெருமையையும் நாம் பெற்றுள்ளோம்.


Tuesday, January 11, 2011

ஐயப்பன் கட்டுக் கதையும் வரலாற்றுத் திரிபும்


 எத்தனையோ முறை சொல்லிச் சலித்தாயிற்று இருந்தாலும் நான் சொல்லியே தீரவேண்டும். ஐயப்பன் கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதில் வரலாற்றுத் திரிபு ஒன்று என்னால் கண்டறியப் பட்டது.(Anachronism). 

பந்தள ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் என்பது கதை. இந்தப் பந்தள வம்சம் மதுரை மன்னர்களின் வழித் தோன்றல்கள். இதை தற்போது இருக்கும் பந்தள வாரிசு ஒப்புக் கொண்டு தமிழ் வார இதழுக்குப் பேட்டியும் தந்து இருக்கிறார். பந்தள வம்சத்தின் முக்கியக் கடவுள் மதுரை மீனாட்சி அம்மன். இதையும் அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் அய்யப்பனுக்குச் செய்யும் சடங்கிற்கு மதுரையில் இருந்து சீர் செல்கிறது. இதுவும் அவரது பேட்டியில் இருக்கிறது. சரி இப்போது அதற்கு என்ன? இன்னும் தமிழக கிராமப் புறத்தில் வணங்கப்படும் அய்யனார் மற்றும் பதினெட்டுப் படிக் கருப்பன் தான் ஐயப்பன் என்பது புலனாகின்றாதா?
ஐயப்பன் என்பது தமிழக நாட்டுப்புறக் கடவுளின் தாக்கம் தான் என்று உறுதியாகக் கூறலாம்.

சரி Anachronism  என்றால் என்ன ?
வரலாற்றில் முன்னுக்குப்பின் முரணாக நடந்தவைகளை மாற்றிச் சொல்வது. அதாவது ராஜ ராஜ சோழனும் சேரன் செங்குட்டுவனும் சேர்ந்து கல்லணை கட்டினார்கள் என்பது போல.

சரி இங்கே எது Anachronism? 
ஐயப்பன் கடவுளர்களின் மகன் அதாவது சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பிறந்தவர். (HOMOSEXUAL அல்ல) அந்தக் கட்டுக் கதையை இப்போது சொல்லவில்லை. ஐயப்பனின் நண்பர் வாவர் என்னும் முஸ்லிம்.

இந்தியாவிற்கு ஏழாம் நூற்றாண்டில் தான் முஸ்லிம் வணிகர்கள் கேரளா  வருகிறார்கள். அதன் பின் எப்படியோ முஸ்லிம் மக்கள் பெருகி வாவர் என்பவர் படை உருவாக்குகிறார். சரி அதை எல்லாம் விடுங்கள். ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு கடவுளின் மகனும் ஒரு முஸ்லிம் படைத்தலைவனும் மோதிக்கொண்டு சமாதானமாகி நண்பர்கள் ஆகிறார்கள். ஏழாம் நூற்றாண்டு என்பது வரலாற்றுக்கு உட்பட்ட காலம். இதை ஏன் இந்திய வரலாற்று அறிஞர்களால் கண்டு கொள்ள முடியவில்லை? ஏனெனில் இதைப் போல எங்கோ நடந்த எதோ ஒரு சிறிய விஷயத்தை பெரிது படுத்தி கடவுளின் பெயரால் வியாபாரம் செய்கிறார்கள். கடவுளின் மகன் என்றால் சாதாரண விஷயமா? இயேசு கூட கடவுளின் மகன் தானே? அந்தக் கட்டுக் கதை எப்படி இருக்கிறது? அவர் என்னென்ன செப்படி வித்தைகளை எல்லாம் செய்தார். ஐயப்பனைப் பற்றி முழுதாக ரீல் விடுவதற்குள் அவர் படம் ரிலீஸ் ஆகிவிட்டதோ?

இந்துக் கடவுள்கள் அவதாரம் எடுப்பது யுகம் யுகமாகும் என்பது நம்பிக்கொண்டிருக்கும் கட்டுக் கதை. அப்படி இருக்க எந்த யுகத்தில் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்தார்கள்? எந்த யுகத்தில் ஐயப்பன் பிறப்பிக்கப்பட்டார்? கி பி ஏழாம்  நூற்றாண்டு ஒரு யுகத்துள் வருகிறதா? பிறகு கலியுகம் என்பது எது?

முட்டாள் அய்யப்ப பக்தர்களே ஒரு கட்டுக் கதையை நம்பி கட்டுக் கட்டிப் போய் சபரி மலையில் மலையாளிகளிடம் செருப்படி வாங்கி வருகிறீர்களா? மூடர்களே நீங்கள் கடவுளை நம்புவதை நான் குறை கூறவில்லை. எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது.

இங்கே இல்லாத கடவுளா? கோயிலா? அறிவு கெட்ட முண்டங்களாபோய் மலையாளத்துக்காரனிடம் அடிவாங்கவா விரதம் இருந்து போறீங்கசாமின்னா எல்லாத்தையும் நம்பிவிடுவீர்களா? யோசித்துப் பாருங்க கடவுளை நம்பினால் பரவாயில்லை, கட்டுக் கதையை நம்பாதே.

Sunday, January 9, 2011

தமிழ் நாட்டுத் தேர்தல் கூட்டணித் தத்துவம்


நான் கடந்த 1989 முதல் கண்டு கேட்டு உணர்ந்த,  கூட்டணி மாற்றங்கள், அரசியல் கட்சிகளின் புகழுரை, தனி மனிதத் தாக்குதல், கேவலமான தொகுதி உடன்பாடு, தியாகம் செய்யப்பட கொள்கைகள், பதவி பேரம், பணபலம், இன்ன பிற... எல்லாம் சேர்த்து  பின் கண்ட வரையறையைச் சொல்கிறேன் 

தமிழகத் தேர்தல் கூட்டணி என்பது நேற்றைய எதிரிகளோடு நாளைய நண்பர்களை எதிர்த்து பதவிக்காகத் தற்காலிகமாக அமைத்துக் கொள்வது. 


இங்கு நேற்றைய எதிரிகள் என்பது சென்ற தேர்தலில் எதிரணியில் இருந்தவர்கள். 
நாளைய நண்பர்கள் என்பது இன்று எதிரணியில் இருப்பவர்கள் நாளை இந்த அணிக்கு வரலாம்.


மேற்கண்டது முதல் தத்துவம், இதன் துணைத் தத்துவங்கள், வாரிசுக்காக இன அழிப்புக்காக என்று பல்வேறு வகையான உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அதை நீங்களே வரையறுத்துக் கொள்ளலாம்.