Saturday, February 26, 2011

தமிழ் : உலகில் அதிகம் பேசப்படும் இருபது மொழிகளில் ஒன்று


எத்தனை தோல்விகள், எத்தனை அவமானங்கள், எத்தனை விரக்திகள், எத்தனை மிரட்டல்கள், சொல்லிக்கொண்டே போகலாம்...இருந்தாலும் தமிழின் பெருமையை அழிக்க முடியாது, தோழர்களே...இதோ உங்களுக்காக நம் பெருமையை நாம் தெரிந்து கொள்ள இந்தப் பதிவு....


உலகில் உள்ள மொழிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் எத்னோலாக் என்ற இணையதளம் உலகத்தில் உள்ள மொழிகள், அவற்றின் பயன்பாடுகள், அவைகள் பேசப்படும் நாடுகள், அவைகளைப் பேசுவோர் பற்றி ஆராய்ச்சி செய்து அவைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிடும். இவர்கள் 2009 ஆம் ஆண்டு 

Ethnologue: Languages of the World Sixteenth Edition

 என்ற நூலை வெளியிட்டு உள்ளார்கள். அதில் அவர்கள் உலக மொழிகளின் தரவரிசையை  வெளியிட்டுள்ளார்கள். அதில் தமிழுக்கு 18 ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் 17 நாடுகளில் தமிழ் பேசப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.  

6.5 கோடிப்பேர் தமிழை முதன்மை மொழியாகப் பேசுவதாக அந்த நூல் சொல்கிறது.

Ethnologue: Languages of the World Sixteenth Edition




ஆனால், அதே நிறுவனம் வெளியிட்ட தனது பதினைந்தாம் வெளியீட்டில் தமிழுக்கு பதினேழாம் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது. தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 6.8 கோடியாக இருந்தது. இந்தியர்கள், சிங்களர்கள், தமிழர்கள், விதி, கடவுளர்கள் எல்லாம் சேர்ந்து கொன்று போட்டபின் இப்போது வெறும் 6.5 கோடி பேர் மட்டும் தமிழ் பேசுகிறர்கள். இப்போது இந்திய அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை எடுத்து வருகிறது அதில் உண்மைகள் மறைக்கப் படாமல் இருந்தால் எத்தனை பேர் இந்தியாவில் தமிழ் பேசுகிறார்கள் என்று தெரிய வரும். 

Ethnologue: Languages of the World Fifteenth Edition




வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு,  நாம் கோருவது என்ன வென்றால் உங்களது நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 'வீட்டில் பேசும் மொழி என்ன?' என்றால், தமிழ் என்று அச்சப் படாமல் சொல்லுங்கள். தமிழ் பேசுவோரின் உண்மையான எண்ணிக்கையை உலகுக்குக் காட்டுவோம்.

இந்தப் பட்டியலைப் பாருங்கள் தமிழை விடக் குறைந்த எண்ணிக்கையில் பேசும் மொழியை உடையவன் எல்லாம் தனக்கென ஒரு நாட்டை வைத்துள்ளான். தமிழுக்கென்று ஒரு நாடு இந்தப்பூவுலகில் படைக்கப்படவேண்டும் என்பது என் தீராத ஆசை. 

தமிழனுக்கு என்று எவனாவது தனிநாடு கேட்டால் உங்களால் உதவ முடியாட்டாலும் பரவாயில்லை, தடுக்க முயற்சியினைச் செய்யாதீர்கள். 

Thursday, February 24, 2011

தமிழக சட்டமன்றத் தொகுதிகள் ஏலத்துக்கு: கார்ப்போரேட் நிறுவனங்கள் கவனத்துக்கு

தமிழக சட்டமன்றத் தொகுதிகள் ஏலத்துக்கு

கட்சிமாறிகள், கட்சி தாவிகள், கொள்கை மறந்தவர்கள், பதவி வெறியர்கள், காட்டிக் கொடுப்போர், போட்டுக் கொடுப்போர், நம்பிக்கைத் துரோகிகள், எதிரியிடம் சரணடைவோர், இன்னபிற எல்லாம் நாம் MLA ஆகவும், MP ஆகவும் பார்த்திருக்கிறோம். எந்தக் கட்சியும் நம்பும்படி இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.

முன்பு திகவில் இருந்து திமுகவுக்கு மாறினார்கள், திமுகவிலிருந்து அண்ணா திமுகவுக்கு மாறினார்கள், அதெல்லாம் ஓரளவுக்குக் கொள்கை என்று எடுத்துக் கொள்ளலாம். அது ஜனநாயகக் காலம். பிற்பாடு வந்தது பாருங்கள் பணநாயகக் காலம். எவன் எந்தக் கட்சியில் இருக்கிறான் என்று நமக்கும் தெரிவதில்லை, அவனுக்கும் தெரிவதில்லை.

எது ஆளுங்கட்சியோ அதற்குத் தாவும் மக்கள் பிரதிநிதிகள். எல்லாக் கட்சியிலும் இருக்கிறார்கள். யாரும் விதிவிலக்கில்லை. திமுகவிலிருந்து அண்ணா திமுகவுக்கு, அண்ணா திமுகவிலிருந்து திமுகவுக்கு, மதிமுக விலிருந்து திமுகவுக்கு, கம்யூனிஸ்டிலிருந்து திமுகவுக்கு, அண்ணா திமுகவிலிருந்து காங்கிரசுக்கு, இதற்கெல்லாம் எடுத்துக் காட்டு கேட்காதீர்கள். எல்லாம் உங்களுக்குத் தெரியும். பேசிக்கொண்டு போனால் வாய் வலிக்கும் தட்டச்சு செய்தால் கைவலிக்கும்.

உச்சி கவுடரில் ஆரம்பித்து, ஜென்னிபர் சந்திரன், செல்வ கணபதி, சேடப்பட்டி முத்தையா, கம்பம் ராமகிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், எல் கணேசன், திருப்பூர் கோவிந்தசாமி,பேராசிரியர் தீரன், எஸ் வி சேகர் இன்னும் ஏராளமானோர்.

நிற்க, இவர்கள் எல்லாம் கொள்கையின் அடிப்படையிலா மாறினார்கள் என்று நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை பணம். பணம் தான் அய்யா, பணம் தான், எவ்வளவு கொள்ளை அடித்தான் என்று செய்திகளில் பாருங்கள். அதைத் திரும்பச் சொல்லவேண்டாம். தமிழன் பிணத்தின் மேல் உட்கார்ந்து பணம் எண்ணும் ரத்தக் காட்டேரிகள்.
அண்ணா, ஜீவா, ஆசைத்தம்பி, பட்டுக் கோட்டை அழகிரி...என்று வளர்ந்த திராவிடப் பரம்பரையைப் பாருங்கள். இன்றோ பொருக்கி, போக்கிரி, விலைமகள், நடன மங்கை, இன்னும் சொல்லக் கூசும் செயல் செய்யும் தலைவர்கள். அதனால் தான் சொல்கிறேன், கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். கார்ப்பரேட் நிறுவனங்களை அழைத்து தமிழக சட்டமன்றத் தொகுதிகளை ஏலம் எடுக்கச் சொல்லுங்கள். வரும் பணத்தைத் தொகுதி மக்களுக்குப் பிரித்துக் கொடுங்கள். அதிகத் தொகுதியை ஏலம் எடுக்கும் நிறுவனத்திடம் ஆட்சியைக் கொடுங்கள். ஏனெறால் இந்த MP,MLA அனைவரும் காசு வாங்கி கட்சிமாறும் பச்சோந்திகளே.
முந்தைய பதிவில் சொல்லியவாறு தமிழ்நாட்டுக்கு விலை வெறும் ரூ 1950 கோடி தான். ஒரு கிரிக்கெட் கிளப்பின் விலைகூட இல்லை . எவ்வளவு சல்லிசு பார்த்தீர்களா? இந்தக் கட்சிகளும் தொங்கு சட்டமன்றம் வந்தால் விலை பேசத்தான் செய்யும். டபுள் ஏஜண்டுகள் நிறைந்திருக்கும் கூட்டணிதான் பாருங்கள்.

எவனிடம் கொள்கை இருக்கிறது? பணம் ஒன்றே குறி.
எனவே தான் கெஞ்சிக் கேட்கிறோம்,
டாட்டாக்களே, பிர்லாக்களே, பஜாஜ்களே, கோத்தாரிகளே, சேட்டுகளே, பார்சிகளே, பணம் படைத்த பரதேசிகளே வாருங்கள் தமிழ்நாடு எண்ணும் சத்திரத்துக்குத் தாள் போடுங்கள்.

உங்களிடம் பணத்தை வாங்கி கட்சிக்காரங்கள், மற்ற கட்சிக் காரங்களை வாங்குவாங்கள். அதை என் நீங்களே வாங்கக் கூடாது?

இந்திய நிறுவனங்கள் வாங்க வில்லை என்றால், Fortune 500 கம்பெனிகளை அழைத்து உலக டெண்டர் விட வேண்டி வரும்.
பின்கண்டவைகள் உலகின் முதல் பத்துக் கம்பெனிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவைகளிடம் தமிழ் நாட்டை ஒப்படைப்பு செய்ய எங்களுக்கு ஒன்றும் கூச்சம் இல்லை. கிழக்கு இந்தியக் கம்பெனியிடம் இந்தியாவே சரண் அடைந்து இருந்தது என்பதை நாம் அறிவோமல்லவா?

1 Wal-Mart Stores, United States, Retail
2 Royal Dutch Shell, Netherlands, Petroleum
3 Exxon Mobil, United States, Petroleum
4 BP, United Kingdom, Petroleum
5 Toyota Motor, Japan, Automobiles
6 Japan Post Holdings, Japan, Diversified
7 Sinopec, China, Petroleum
8 State Grid, China, Power
9 AXA, France, Insurance
10 China National Petroleum, China, Petroleum

Wednesday, February 23, 2011

தமிழ் நாட்டின் விலை ரூ 1950 கோடி

அம்பானியின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருக்கும்.

அப்படியானால் தமிழ் நாட்டிற்கு என்ன விலை? நமக்கு என்ன விலை?

உங்களுக்கு அரசால் புரசலாக சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். தெரிய வில்லை என்றால் நீங்கள் வருத்தப் பட வேண்டும். மத்தியில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போதெல்லாம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வளவு தொகை கொடுக்கப் பட்டது என்று பத்திரிகைகள் செய்தி வெளியிடும். நாமும் படித்திருப்போம். அதாவது கட்சி மாறி ஓட்டுப் போட அல்லது கட்சி தாவ என்பதற்கு அது. இருக்கட்டும்.

சென்ற பாராளுமன்றத்தேர்தலில் ஒருவர் தேர்தலில் வென்று விட்டார். அவரை எதிர்த்து தோற்றவர் மிகப் பெரும் ஜனநாயகவாதி. ஆனால் அவர் தயவால் தான் பக்கத்து நாட்டில் சொந்த இன மக்கள் மீது படுகொலைகள் சர்வ சுதந்திரமாக நடந்தேறின. அப்படிப் பட்ட கட்சி விசுவாசியை எப்படி மேலிடம் கைவிடும்? வேன்றவரிடம் மன்றாடி மிரட்டி சாம தான பேதம் செய்து வென்றவர் தோற்றதாக அறிவிக்கப் பட்டது. அதற்கு கைமாறியது ஐம்பது கோடி என்று வதந்தி இருக்கிறது. இதை வைத்து தமிழ் நாட்டின் விலையை நாம் நிர்ணயிக்கலாம்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐம்பது கோடி. ஒரு தொகுதிக்கு ஐம்பது கோடி என்றால். முப்பத்தி ஒன்பது தொகுதிக்கு ஓராயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது கோடி. எனவே தமிழ் நாட்டின் விலை, 2009 நிலவரப்படி ரூ 1950 கோடிகள். தமிழ் நாட்டில் மொத்தம் 6.8 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொருவரின் மதிப்பு ரூ 287 ஆகும். நடப்பு நிலவரம் தேர்தல் வந்தாலோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலோ தெரியவரும்.

Saturday, February 19, 2011

டபுள் ஏஜன்ட் ராமதாஸ் வாழ்க!




தமிழ் இன உணர்வு தமிழகத்தில் தலை தூக்காதிருக்க உளவு நிறுவனங்களுக்கு அவர்களது வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் ஒரு டபுள் ஏஜன்ட் வேண்டும். அதற்கு சாதிக்கட்சித் தலைவர்களைப் பயன் படுத்திக் கொள்ள முயற்சி செய்தன. சாதிக்கட்சித் தலைவர்களான ராமதாசும் திருமாவளவனும் அவர்களது சரியான தேர்வானது. 

MGR காலத்தில் திமுகவை பலவீனப்படுத்த ராமதாசை இந்திய உளவு நிறுவனங்கள் பயன்படுத்தின என்பது அனைவரும் உணர்ந்த சேதிதான்.  




ஒரு முறை சுப்பிரமணிய சாமியின் லெட்டர் பேட் கட்சியின் வட இந்திய நிர்வாகி ஒருவன் சொன்னான் தமிழ் நாட்டை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்று. சுப்பிரமணிய சாமி இந்திய உளவு நிறுவனங்களால் தமிழ், தமிழர், தமிழ் நாடு, ஈழம் ஆகியவற்றுக்கெல்லாம் எதிராக ஏவி விடப்படும் நாய் என்பது நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. இவனது கட்சியால் முன்மொழியப் பட்ட தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கும் யோசனையை தமிழ் நாட்டில் சாதிக்கட்சி நடத்தும் ராமதாஸ் வழி மொழிந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தமிழ் ஊடகங்கள் ராமதாசுக்கு டின்னுக் கட்டினதால், மனிதர் அதைக் கைவிட்டார்.  

இவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர்  மத்திய அமைச்சராக இருந்த போது காஞ்சி காம கேடி மடத்திற்கு ஆசி வாங்க அடிக்கடி செல்வார்.  காஞ்சி மடம் பராரிகளின்  மடம் என்பது இவர்களுக்குத் தெரியாதா?

சோனியாவின் கரத்தை வலுப்படுத்திக் கொண்டே ஈழத்தை ஆதரிக்கும் அதிசயப் பிறவி இவர். காங்கிரஸ் இருக்கும் வரை ஈழம் என்றுமே கிட்டாது. 

தன் மகனின் பதவிக்காக தன் சாதிக்காரர்களை எல்லாம் பயன்படுத்தி கட்சி நடத்தும் சாமார்த்தியசாலி இவர். ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறி பதவியைப்  பிடிக்கும் கொள்கை மறவர் இவர். 

இப்போது முப்பத்தி ஒரு தொகுதிகளில் தமிழனை அழித்துச் சிங்களனை வாழவைக்கும் காங்கிரஸ்-கருணாநிதி கூட்டில்  களமிறங்குகிறார்.

அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவை சகோதரி என்று சொல்லி இவர் மீண்டும் அண்ணா திமுகவினருக்குத் தாய் மாமன் ஆவார். 

அப்போதும் இவரது குடும்பத்துக்குப் பதவி கிடைக்கும் இவரது சாதிக்காரர்கள் அப்போதும் இவரை ஆதரிப்பார்களா?

Friday, February 18, 2011

ஈழத் தமிழர்களே கடைசி அனுதாபத்தையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

ஈழத்தமிழர்களை ஆதரிப்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு தேசத்துரோகமாகவே இப்போது பார்க்கப் படுகிறது. இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லர். அவர்கள் இந்திய தேசியத்தைப் பேசும் இந்தியர்கள். ஈழத்தில் தமிழர்களது உரிமையைப் பேசும் போது தங்களுக்கும் உரிமைகள் இருக்கும் என்பதை அறியாது அனைத்தையும் இழந்து நிற்கும் பரிதாபமான ஜந்துக்கள்.

ஈழத்தமிழர்களை தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்துத் தமிழர்களும் ஆதரிக்கவில்லை லட்சத்தில் ஒருவன் தான் ஆதரிக்கிறான். இந்திய சிங்கள உளவுத்துறைகளின் கைகளில் சிக்கி ஈழத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்கள் வடக்கு மாகாணத் தமிழர்கள் என்று பிரிந்து கிடக்கிறார்கள். ஈழத்தில் ஒரு மாகாணத் தமிழன் சாகும் போது இன்னொரு மாகாணத் தமிழன் சிரிக்கிறான். ஆனால் இரண்டு மாகாணத் தமிழர்கள் சாகும் போதும் தமிழ் நாட்டுத் தமிழன் வேதனைப் படுகிறான்.

தேசத்துரோகமாகவே கருதப் பட்டாலும், தமிழ் நாட்டில் இருக்கும் தமிழன் ஈழத்தை ஆதரித்தான். வைகோ,சீமான், நெடுமாறன், இன்னும் ஏராளமானோர் சிறை சென்றனர். முத்துக்குமார் போல பலர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் இந்திய சிங்கள உளவுத்துறைகளின் ஏவலுக்கு அடிபணிந்து தமிழக மீனவர்கள் மீது ஈழ மீனவர்கள் தாக்குதல் நடாத்துகிறார்கள். இது கொஞ்சமும் சகித்துக் கொள்ள இயலாது.

இது தொடர்ந்தால் இதைத் தடுத்த நிறுத்த வேண்டியது ஈழத் தமிழர் தலைவர்களின் பொறுப்பு, இல்லையேல் தமிழகத்தில் உங்கள் மீது வெறுப்பு தான் வரும்.

இதுவரை ஐநூறு தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுத் தள்ளி இருக்கிறது. அத்தனை கணக்கையும் ஈழ மீனவர்கள் மேல் போட இரு நாட்டு உளவு அமைப்புகளும் முயற்சி செய்யும். முட்டாள் ஈழ மீனவன் அந்தப் பழியை வாங்கிக் கொள்வான். தமிழகத்தில் எஞ்சி இருக்கும் ஈழ ஆதரவு அற்றுப் போகும்.

ஒரு முறை பெரியார் சொல்லியது சரியென்று படுகிறது , "தமிழன் காட்டு மிராண்டி".

Wednesday, February 16, 2011

கையாலாகாத பாஜக : இன்னும் எத்தனை வாய்ப்பு வேண்டும்?



கட்சி நடத்துவது எதற்கு?
ஆட்சியைப் பிடிக்கத்தான். 
ஆட்சி சும்மா கிடைக்குமா
தேர்தலில் ஜெயிக்க வேண்டும்.
தேர்தலில் ஜெயிக்க என்ன வேண்டும்?
மக்கள் செல்வாக்கு வேண்டும்.
 மக்கள் செல்வாக்கு சும்மா கிடைக்குமா
மக்கள் சேவை செய்ய வேண்டும்.
மக்கள் சேவை என்றால் கோவில் கட்டினால் போதுமா?
முட்டாளே அது யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற போது கிளப்பப் பட வேண்டிய பிரச்சினை.
சரி இப்போ என்ன பிரச்சினை இருக்கு?
இப்போ என்ன பிரச்சினை இருக்கு என்று தெரியாததனால் தான் நீ இன்னும் பாஜகவில் இருக்கிறாய்!
என்ன சொல்கிறாய்?
முட்டாளே இப்போது தினமும் ஓர் ஊழல் என்று செய்தி ஊடங்களில் ஓவர்டைம் போட்டு செய்தி வாசிக்கிறார்களே உங்களுக்குத் தெரிய வில்லையா?
 எத்தனை விதமான ஊழல்கள், காமன் வெல்த் விளையாட்டு ஊழல், 2G  ஸ்பெக்ட்ரம் ஊழல்,  எஸ் பேன்ட் ஊழல், விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, வெங்காயத் தட்டுப்பாடு, மீனவர் பிரச்சினை, வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணம்,இன்னும் என்னவெல்லாமோ 
பிரச்சினைகள்...

 ஊழல்களில் லட்சக்கணக்கான கோடிகள் பணப் பரிமாற்றம்,  இதை எல்லாம் அனைத்து சாமானியனும் அறிவான். அவனுக்கு யாவைகள் எல்லாம் ஏற்கனவே தெரிந்து விட்டது. அதை நீங்கள் பிரச்சாரம் செய்து ஆளும் கட்சிக்குத் தலைவலி  தர வேண்டாமா? பாராளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவராக முரளி மனோகர் ஜோஷி தானே இருக்கிறார். இதை வைத்து நீங்கள் பிரச்சாரம் செய்யக் கூடாதா? முரளி மனோகர் ஜோஷியின் மாணவரான வி பி சிங் 64  கோடி போபோர்ஸ் பீரங்கி ஊழலை மட்டுமே வைத்து 1989 இல் ஆட்சியைக் கைப் பற்றினார். மு.ம.ஜோஷிக்கு ஏன் இந்த வித்தை தெரிய வில்லை. உங்களுக்கு ஏதாவது குட்டிச்சுவருக்கு கூரை போடுவது பஜனை மடம் கட்டுவது என்பது தான் பிரச்சினையா? ஆட்சியைப் பிடிக்க ஆளுங்கட்சி இன்னும் எத்தனை வாய்ப்புகள் உங்களுக்குத் தரும் என்று நினைக்கிறீர்கள்? பாராளு மன்றக் கூட்டுக் குழு விசாரணையிலேயே உங்களது குறிக்கோள் நிறைவடைந்து விட்டதா? அதாவது வசூலில் பங்கு? அல்லது ஆட்சி வேண்டுமா? ஆட்சி வேண்டுமானால் போபோர்ஸ் வழக்கை மறுபடியும் விசாரிக்க போராட்டம் செய்யுங்கள். ஊழல் செய்யும் ஆளுங்கட்சியைத் தூக்கியடிக்க வீதியில் இறங்குங்கள். ஏற்கனவே துனீசியா எகிப்து யேமன் நாடுகளில் மக்கள் கொந்தளித்து ஆட்சி மாற்றம் தொடங்கி விட்டது. நீங்கள் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இதோ பாருங்கள் போபோர்ஸ் பீரங்கி எதற்கும் லாயக்கு இல்லாதது என்று ராணுவம் கூறுகிறதாக CNN IBN  செய்தி போடுகிறது. இதையெல்லாம் வீதிக்குக் கொண்டு வாருங்கள். போராடுங்கள். 

இல்லா விட்டால் பொங்கல் சுண்டல் சாப்பிட்டு விட்டு ஏதாவது பஜனை மடத்தில் ராமன் கதை பேசுங்கள். உங்களுக்கு ஆட்சிக்கு வர அருகதை இல்லை. 

Saturday, February 12, 2011

ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு ஆறுதல்




கூட்டணிப் பேச்சு வார்த்தையில் தன்னைச் சேர்க்க வில்லை என்று இளங்கோவன் வருத்தப் பட்டிருக்கிறார். படித்ததும் கண்ணீரை அடக்க முடியவில்லை. பெரியாரின் பேரன், ஈவிகே சம்பத்தின் மகன் இப்படிப் புறக்கணிக்கப் படுவதை நினைத்தால் எந்த சுயமரியாதை கொண்ட தமிழனும், மன்னிக்கவும் இந்தியனும் கண்ணீர் விட்டுத்தான் ஆக வேண்டும். "கடவுள் ஒழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும் , காங்கிரஸ் ஒழிய வேண்டும்" என்று பெரியார் சொன்னார். அந்தக் காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வாய் கிழியப் பேசும் இளங்கோவனுக்கு பேச்சு வார்த்தை நடத்த அனுமதி இல்லை என்றால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது சோனியாவைக் கண்டபடி திட்டினார். அதற்கெல்லாம் இளங்கோவன் மட்டுமே சரியான பதிலடி தந்தார். ஆனால் ஜெயலலிதாவை ஆதரித்தவர்கள் எல்லாம் இப்போது திமுகவை ஆதரிக்கிறார்கள். அப்போதும் ஆளுங்கட்சியை எதிர்த்த இளங்கோவன் இப்போதும் ஆளுங்கட்சியை  எதிர்க்கிறார். இதற்காக நீங்கள் இவரை ஒரு லூசு என்று நினைத்துவிடக் கூடாது. பெரிய அறிவாளியாக்கும். இவர் ஆதரித்தார் என்பதற்காக எஸ் ஆர் பாலசுப்ரமணியம் , யசோதா ஆகியோருக்கும் கூட பேச்சு வார்த்தைக் குழுவில் இடமில்லாமல் போனது. ஐயோ பாவம். 

காங்கிரஸ் கட்சி இவரை எவ்வளவு அவமானம் செய்தாலும்  கூட தாங்கிக் கொள்கிறார், ரொம்ப நல்லவர்... கொள்கையில் உறுதியாக நிற்கிறார்.  மெய் சிலிர்க்கிறது. காங்கிரசை தமிழ் நாட்டு ஆட்சியில் பங்கு கொள்ள வைப்பது என்பது இவர் கொள்கை, (தனியாக ஆட்சியமைக்க இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம். ----.....கனவுகளுக்குத் தடையில்லை.). 

அய்யா இளங்கோவரே சுய மரியாதை பேசிய குடும்பம் உங்களுடையது. ஆனால் அதை எல்லாம் உங்கள்  தந்தை மறந்துவிட்டு நேரு குடும்பத்துக்கு ஜால்றாபோட்டது போலவே நீங்களும் செய்கிறீர்களே. எதுக்குக் கஷ்டப்பட்டு ஊர் ஊராப் போய் ஆளுங்கட்சியைத் திட்டி காங்கிரசை வளர்க்கணும்வளர்த்து, வளர்த்து நேரு குடும்பத்துக்கு சொத்து சேர்க்கணும்? "ஆத்தைக் கடந்த பின் நீ யாரோ நான் யாரோங்கறது" தான் அரசியல் தத்துவம். அப்படி இருக்க  ஏன் போய் நேரு குடும்பத்துக்கு வால் பிடிக்கிறீங்க? உங்களை அவமானப் படுத்திய காங்கிரசுக்கு நீங்கள் சரியான பாடம் கற்பிக்கனும். அவர்கள் உங்களைப் புறக்கணித்து வேட்பாளர்களை அறிவிச்சா, அந்த வேட்பாளர்களைப் பற்றிய உண்மைகளைப் நீங்க புட்டுப் புட்டு வைக்கணும். அவங்களெல்லாம் உங்களை மாதிரி கட்சி வளர்க்க சிரமப் படாமல் எம் எல் ஏ ஆக நீங்க விட்டுறலாமா? நீங்க இதைச் செய்தீங்கன்னு சொன்னாத்தான் உங்களை தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர் ஆக்குவாங்க. நீங்களும் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆகலாம். இல்லாங்காட்டி இந்தியப் பிரதமர்கூட ஆகலாம். அதென்ன ராகுல் காந்தி என்ன பட்டத்து இளவரசனா? நீங்க சும்மா இருந்தீங்கன்னா எப்படி? உங்களுக்கும் பதவி வேண்டாமா? ஒரு நியாயமான காங்கிரஸ்காரன் பிரதமர் ஆகிறதை நாங்க பாக்க வேண்டாமா

என்னவோ போங்க சொல்றதைச் சொல்லீட்டேன். அப்புறம்  உங்க  பாடு.   

Sunday, February 6, 2011

பெரியார் அண்ணா செய்யாததைச் செய்து காட்டிய எஸ்.வி.சேகர்



தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் தங்களது வாழ் நாளில் செய்ய முடியாததைச் செய்து காட்டியவர் எஸ் வி சேகர். காஞ்சி மடம் ஒரு காமக் கிழத்தியர் குடியிருப்பு என்று திராவிட இயக்கத்தினர் கூடச் சொல்லக் கூசும் செய்தியை ஜெயலலிதாவுக்குச் சொல்லி ஜெயேந்திரனை உள்ளே தள்ளிய உத்தமன் எஸ் வி சேகர். இது வரைக்கும்  பிரதமர்கள் ஜனாதிபதிகள் எல்லாம் அந்த ஆள் காலிலே விழுந்திருக்கிறார்கள் . அதற்கெல்லாம் அந்த ஆள் தகுதி இல்லாதவன் என்று அந்த ஆள் அருகிலே இருப்பவர்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் பார்ப்பான் என்ற காரணத்தினால் அதை அவர்கள் ரசிக்கவே செய்தார்கள்.


எல்லாச் சேனல்களில் இந்த ஆள்தான் இந்துக்களின் மத குரு என்பது போல் மாயப் பிரச்சாரம். அதை எல்லாம் தவிடு போடி ஆக்கியது அண்ணன் எஸ்.வி.சேகரின் வாக்கு. பார்ப்பனனாக இருந்தாலும் ஒரு சுத்தத் தமிழனைப் போல நடந்து கொண்டார். 

இவருக்கு தமிழ் மீது ஆர்வமா கோவமா என்பதைவிட இவர் வார்த்தைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். இவர் தான் தூர்தர்சன் மட்டும் இருந்த காலத்தில் ஒரு மேடையில் சொன்னார் , "திராவிடக் கட்சிகளால் தமிழ் நாட்டில் ஹிந்தி படிக்க முடியாமல் போனது, அதனால் தமிழ் நாட்டுக் காரர்கள் யாரும் எட்டு மணிக்கு மேல் டிவி பார்க்க முடியவில்லை, " என்று. 

இவரது ஆதங்கத்தைப் போக்கவோ என்னவோ இப்போது பாருங்கள் எத்தனை டிவி சேனல்கள் தமிழில் பார்க்கப் பார்க்கத் தீர மாட்டேன்  என்கிறது. தமிழ் நாட்டுக்கு நல்லதே செய்யும் எஸ்.வி.சேகர் இன்னும் ஒரு நல்லது செய்ய வேண்டும், எப்படி?

மகாத்மா காந்தி சுதந்திரத்துக்குப் பின் காங்கிரசைக் கலைத்து விட வேண்டு என்று சொன்னார். இப்போது எஸ்.வி.சேகர் காங்கிரசில் சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரது கனவுகளை நிறைவேற்றியவர், காந்தி கனவை நனவாக்க நாமும் வாழ்த்துவோம். 

Saturday, February 5, 2011

தமிழ் நாடு - தேர்தலுக்குப்பின் கூட்டணி மாற்றம் : சோதிடம்



விரைவில் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் ஆளும் கட்சி செய்யும், ஆட்சிக்கு வர எதிர்க்கட்சியும் என்ன வேண்டுமானாலும் செய்யும். 

சரி பல்லாக்குத் தூக்கும் கட்சி என்ன செய்யும்? இந்தக் கேள்வி எம்மைக் குடைந்ததால் நாமும் கருத்துக் கணிப்பு நடாத்திப் பார்த்தோம். அதில் சரியாக பதில் கிடைக்க வில்லை. எனவே ஒரு சோதிடரை அணுகினோம், அவர் சொன்னது வருமாறு,  "பகலில் சூரியன் தெரிவதாலும், இரவில் நட்சத்திரங்கள் தெரிவதாலும்,  திங்களுக்குப் பின்னால் செவ்வாய் வருவதனாலும், மேயிற்குப் பிறகு ஜூன் வருவதாலும்பல்லாக்குத் தூக்கும் கட்சியின் குறிக்கோள்மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுதல். மாநிலத்தில் தன் கட்சிக்காரர்களுக்கு தோதாக காண்ட்ராக்ட் வாங்கிக் கொடுப்பது, மாநிலக் கட்சி காவிக் கட்சியினை அண்டாமல் பார்த்துக் கொள்வது, போன்ற நாட்டு நலனுக்கான திட்டங்கள் இருக்கும் என்று யூகிக்கலாம்."
  
'சரி, யார் ஆட்சிக்கு வருவார்கள் ?' என்று கேட்கப் பட்டதற்கு, "அதிக இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சிக்கு வரும்," என்றார். 
'அது எந்தக் கட்சி?'  என்றதற்கு, "மக்களின் மனதில் இருப்பது தான்," என்றார். 

"மக்களின் மனதில் யார் இருக்கிறார் ?" என்றதற்கு 
"யாராய் இருந்தால் என்ன? ஈஸ்வரகங்கைச்  சீமையிலே சென்ற பாராளுமன்றத்தேர்தலில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியாதா?" என்றார். 
"அப்படி என்ன நடந்தது? " என்றதற்கு, "செத்தவன் பிழைத்தான், தோற்றவன் வென்றான். உடன்பாடு செய்தார்கள்,  கன்று அழைக்கும் வார்த்தையின் பொருளில் இருக்கும் கட்சித் தலைமைக்கு ஆதரவாக,  ரகசியம் சொல்லும் ஊர்க் கோவிலின் பெயரைக் கொண்ட மீசையில்லாத ஆண் ஆதரவு தருவார். வேறு  கட்சிக்குள் உள்குத்து நடக்கும் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் மோதிக்கொள்வார்கள். உளவுத்துறை புகுந்து விளையாடும். ஆட்சி பறிபோகலாம். புதிய ஆட்சி அமையலாம். எதோ ஒரு ஜால்ராவை வைத்து தவறான கூட்டணியில் இருந்து  விட்டோம் என்று அறிக்கை விட்டு ஊழலில் பங்கு கொடுத்த கட்சித் தலைமைக்கு எதிராக மேலிடக் கருத்துக்களைப் பரப்பி கூட்டணியில் இருந்து பிரிந்து புதிய கூட்டணியை அமைக்கலாம். அறிக்கை விட்ட முதல் ஜால்ராவுக்கு மாநில தலைவர் பதவி அளிக்கலாம். பிறகு வரப்போகும் ஊராட்சித் தேர்தலில் இரண்டு மாநகராட்சிகளைப் பெற்றுக் கொண்டு புதிய அத்தியாயத்தைத் தொடங்கலாம். வைகோவும் பாண்டியனும் நொந்து போகலாம். மார்க்சிஸ்டுகள் புதிய ஆட்சியால் பாதிக்கப் பட்ட அரசு ஊழியர்களுக்காக உண்டியல் குலுக்கலாம். இதெல்லாம் நடக்கலாம் நடக்காமலும் போகலாம். அது அது,அந்த அந்த தசா புத்திகளைப் பொறுத்தது. ", என்றார். 

சோதிடத்தை நம்பலாமா? வேண்டாமா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

Tuesday, February 1, 2011

அரசு ஊழியர் ஒய்வு பெரும் வயது: சில யோசனைகள்

வதந்தி மலரின் சிறப்பு நிருபர் கட்டவிழ்த்து விட்ட செய்தி என்னவென்றால், அரசு ஊழியர்களின் ஒய்வு வயது 60 ஆகிறதாம். இந்த செய்தியின் உண்மைத்தன்மையை விட நாம் முன்யோசைனையுடன் அரசுக்குச் சொல்ல வேண்டியவைகள் நிறைய உள்ளன.
இளைஞர்களுக்கு வேலை வேண்டும் முதியவர்களே தொடர்ந்து இருந்தால் அரசு வேலையை செவ்வனே எப்படிச் செய்ய முடியும்?

ஓட்டு வங்கிக்காக இதனைச் செய்யாமல் நாட்டு நலனுக்காக சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மத்தியிலே 60 என்னும் போது மாநிலத்தில் 60 ஆகலாம் தப்பில்லை. ஆனால் தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் அந்தச் சலுகையைக் கொடுக்கக் கூடாது. மாநிலத்தில் பல ஊழியர்கள் தகுதி குறைவானவர்களாகவே இருக்கிறார்கள்.

அனைவருக்கும் 60 என்று நீட்டிக்காமல், தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் ஒய்வு வயதை நீட்டிக்க வேண்டுகிறோம். அதாவது பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் 58 வயது வரை தன்னைத் தகுதி உயர்த்திக் கொள்ளத் தெரியாத ஒருத்தருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஏன் தண்டமாக அரசு சம்பளம்? அப்புறம் முக்கியமான இன்னும் ஒரு விஷயம், ஓய்வு வயது உயர்த்தப் பட்டதால் வேலையிலிருக்கும் அரசு ஊழியர் இறந்தால் கருணை நியமனம் கூடாது. ஏன் கூடாது ? இவர்களுக்கு முழு ஓய்வூதியம் கிடைக்கும் கூடுதலாக மீண்டும் ஓர் அரசு வேலையா? இதனையும் தடுத்து நிறுத்த வேண்டும். தகுதி அற்ற மற்றும் குற்றம் புரிந்து இருக்கும் ஊழியர்கள், மருத்துவ விடுப்பில் அடிக்கடி சென்ற ஊழியர்கள் ஆகியோருக்கு இந்தவகை பதவி நீட்டிப்பு கூடாது.
இதை நாட்டு நலனுக்காகச் சொல்கிறோம். கேட்டால் கேளுங்கள்.

தன்னையும் தமிழர் தலைவரையும் திட்டிக் கொண்ட சோனியா

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=369861&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

மேற்கண்ட இணைப்பில் சென்று தினமணி செய்தியினைப் படியுங்கள், எனக்குத் தோன்றியதைக் கீழே தந்துள்ளேன், உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று பாருங்கள்.


பதவிக்கும் பணத்துக்கும் பித்துப் பிடித்து அலைவது தப்பு என்று இந்திய அன்னை சொல்லியிருக்கிறார்கள். எனக்கென்னமோ படித்துப் பார்த்தால் அது தலைவரைத் திட்டியது போல் தான் தெரிகிறது.

சபரி யாத்திரைக்கும் சாலைப் போக்குவரத்துக்கும் மீன்பிடிக்கவும் தடை : உச்ச நீதிமன்றத்துக்கு யோசனை.

விலங்குகள் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடுத்த வழக்கில் உச்சா நீதிமன்றம் ஜல்லிக்கட்டைத் தடை செய்யலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறது. அவர்கள் சொல்வதும் சரிதான் என்று எண்ணுகிறேன்.
தினத்தந்தியில் வந்த செய்தியினை நீங்கள் படியுங்கள்.

இதன் சுட்டி கீழே காட்டப் பட்டுள்ளது. உங்களது கணினியில் கீழே உள்ள எழுத்துரு சரியாகத் தெரியவில்லை என்றால் தினத்தந்தி வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள். அல்லது தினத்தந்தி வலைத்தளத்தில் சென்று பாருங்கள்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=624409&disdate=2/2/2011


UeL• NÖYÛR SÖjL• «£•T«¥ÛX, AR]Ö¥ ^¥¦eLyÛP RÛP ÙNšVXÖUÖ? GÁ¿ R–ZL AWreh r¢• ÚLÖŸy| ÚL•« «|†R‰.

^¥¦eLyÛP RÛP ÙNšVeÚLÖ¡, «XjhL• SX YÖ¡V• RÖeL¥ ÙNšR UÄ, r¢• ÚLÖŸyz¥ Œ¨ÛY›¥ E•[‰. A•UÄ, ÚS¼¿ ‡T‡L• BŸ.«.W®‹‡WÁ, H.ÚL.TySÖVe BfÚVÖŸ APjfV ÙTto ˜Á“ «NÖWÛQeh Y‹R‰.

AÚTÖ‰, «XjhL• SX YÖ¡V• NÖŸ‘¥ B^WÖ] ™†R Yeg¥ WÖÇ TtoYÖ YÖ‡|ÛL›¥, `LP‹R ^]Y¡ 14-‹ ÚR‡ ˜R¥ 19-‹ ÚR‡YÛW R–ZL†‡¥ SÛPÙT¼\ ^¥¦eLyz¥ 2 ÚTŸ T¦VÖf E•[]Ÿ. 215 ÚTŸ LÖV• AÛP‹‰•[]Ÿ' GÁ¿ i½]ÖŸ.

AR¼h R–ZL AWr YegÛX TÖŸ†‰ ‡T‡L• i½VRÖY‰:-

I‹ÚR SÖyL¸¥, ^¥¦eLy|eh 2 ÚTŸ T¦VÖf E•[]Ÿ. 200 ˜R¥ 300 ÚTŸ YÛW LÖV• AÛP‹‰•[]Ÿ. ÚLÖŸy| LLÖ‚ÛT•, «‡˜Û\LÛ[• —½, C‹R «T¢R• SP‹‰•[‰, ÚYRÛ] A¸ef\‰. UeL• NÖYÛR SÖjL• «£•T«¥ÛX. G]ÚY, ^¥¦eLyÛP RÛP ÙNšVXÖUÖ?

CÛR RÛP ÙNšV ÚY|• GÁ¿ SÖjL• ÙNÖ¥X«¥ÛX. C‰ U¡VÖÛReh¡V, TÖW•T¡V «Û[VÖyPÖL C£eLXÖ•. B]Ö¥ pX TÖ‰L֐“ SÛP˜Û\L• YheLTP ÚY|•. ^¥¦eLyÛP JµjhT|†R R–ZL AWr pX L|ÛUVÖ] SPYzeÛLLÛ[ G|eL ÚY|•.

CªYÖ¿ ‡T‡L• i½]Ÿ.

^¥¦eLyÛP SP†‰• J£ AÛU‘Á Yeg¥, ^¥¦eLy|eh AÄU‡ A¸eh• A‡LÖW•, UÖYyP LÙXePŸLºeh A¸eLTP ÚY|• GÁ¿ YÖ‡yPÖŸ.

AR¼h ‡T‡L•, `CÁÄ• B›W• ÚTŸ NÖL ÚY|• GÁ¿ «£•“f¾ŸL[Ö?' GÁ¿ AYÛW TÖŸ†‰ ÚLyP]Ÿ. ‘Á]Ÿ, «NÖWÛQÛV J†‡ ÛY†R]Ÿ.

அதாவது ஜல்லிக்கட்டினை தடை செய்யலாம் என்ற அளவுக்கு பேசியிருக்கிறார்கள்.
நாம் ஏற்கனவே ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கவச உடை வேண்டுமென்று ஒரு பதிவினையும் பகிர்ந்துள்ளோம். மேற்கொண்டு விவரங்களுக்கு அதைப் படியுங்கள் என்று கேட்டுக்கொண்டு வேறு விவரங்களுக்கு வருவோம்.

2 பேர் பலி 215 பேர் காயம் என்றதற்கு ஜல்லிக்கட்டினைத் தடை செய்யலாம் என்று யோசனை கூறினால், பின்கண்ட யோசனைகளையும் நாம் கூறவேண்டி வரும்....

100 பேர் பலியான சபரிமலை யாத்திரையைத் தடை செய்யலாம்.
500 பேருக்கும் மேல் மீனவர்கள் இறந்து விட்டதால் கிழக்குக் கரை மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடை செய்யலாம்.
சாலை விபத்துக்களில் தினம் தோறும் பலர் சாவதால் சாலைப் போக்குவரத்தினைத் தடை செய்யலாம்.

நான் சொல்வது சரி தானே உச்ச நீதிமன்றத்திற்கு யோசனை வழங்கினேனே தவிர அவர்கள் அதாவது மை லார்ட்கள் சொன்னதைத் தப்பாக நான் கூறவில்லை. எப்படி நம் சமயோசிதம்?

கேமரான் டயசுக்கு ஏஞ்சலினா ஜூலிக்கு கலைமாமணி விருது.

தெலுங்கு நடிகைகள் மலையாள நடிகைகள் எல்லாருக்கும் தமிழர் தலைவர் கலைமாமணி விருது வழங்கப் போகிறார். இவர்களது கலைச்சேவை அனைவரும் அறிந்ததே. இவர்கள் ஒன்றோ இரண்டோ தமிழ்ப் படங்களில் நடித்திருக்கலாம், இவர்கள் தமிழர்களின் மனத்தைக் கொள்ளையடித்து இருக்கலாம், இதனால் விருதுக்கு பெயரைப் பரிந்துரைப் போர் இவர்களது பெயரையும் சேர்த்து இருக்கலாம். அல்லது இவர்களது பெயர்களைத் தவிர்க்க முடியாததால் சேர்த்து இருக்கலாம், இருக்கட்டும்......

தமிழர்களுக்கு வெள்ளைக்காரிகளைப் பிடிக்காது என்று யார் சொன்னார்கள், மேற்கண்ட இரண்டு பேர் மட்டுமல்ல சான்றா புல்லக், ட்ரு பேர்ரிமூர், ரீஸ் விதேர்ச்பூன், இன்னும் ஏராளமான நட்சத்திரங்களை எல்லாம் கலைமாமனிக்கு சிபாரிசு செய்யலாமே, ஆனால் இவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள், என்று கேட்காதீர்கள், மற்றவர்கள் மட்டும் என்ன செய்தார்கள்? இவர்கள் செய்யாததை?... இவர்களும் தமிழ் மக்களுக்கு சேவை செய்துள்ளார்கள். எப்படி? ஹாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும் அவைகளும் டப்பிங் செய்யப்பட்டு தமிழ்ச் சேன்னல்களில் ஒளிபரப்பு செய்யப் படுகின்றனவே. அப்படியானால் இவர்களும் தமிழ்ச் சேவை செய்கிறார்கள், தமன்னா, அனுஷ்கா, மீரா ஜாஸ்மின் போல.... அப்பாவி வெள்ளைக்காரிகள் என்றால் இளக்காரமா என்ன? குரல் கொடுக்க நாங்க இருக்கோம்னேன்!