Monday, January 24, 2011

தமிழர் தலைவரின் அடுத்த நாடகம்.



தமிழர் தலைவர் பதவியை விட்டு விலகுவேன் என்று அளந்திருக்கிறார். படித்ததும் சிரிப்புத்தான் வந்தது. இதே ஸ்டண்டை எத்தனை முறை அடிப்பது. இந்தப் பதவிக்குத் தானே தன் இனம் அழிவதை வேடிக்கை பார்த்தார். எதிரியுடன் குலாவி ஒரு லட்சம் தமிழர்கள் கொலைக்குத் துணை  போனார். யாராவது போராட்டம் செய்தால் ஆட்சியைக் கவிழ்க்க சதி என்று கூப்பாடு போட்டார். இன்னும், நாளும் ஒரு மீனவன் சிங்கள நாய்களால்  கொல்லப்படுகிறான், ஒப்புக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதி விட்டு வராத கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார்.

இந்த தமிழர் தலைவர் அமைதியாக இருந்து விட்டதால் ஒட்டு மொத்த உலகமும் நமக்கேன் என்று இருந்து விட்டது.

உங்களுக்கெல்லாம் தெரியும் திருமணத்துக்கு முன் மாப்பிள்ளைகள் காசி யாத்திரை செல்லும் சடங்கு, ஒரு சில பிரிவினரிடையே இருக்கிறது. அங்கே மாப்பிள்ளையும் காசிக்குப் போக மாட்டான், மாமனாரும் விடமாட்டான்.அதே காமெடி தான் இங்கேயும். இந்த தலைவரும் விலக மாட்டார், தொண்டரடிப் பொடிகளும் விடமாட்டார்கள்.

வேண்டுமானால் பாருங்கள் இந்த வேடிக்கையை எதிர்த்து சிலர் உண்ணாவிரதம், தீக்குளிப்பு, மறியல், தந்திகள், என்று ஏராளமாக இருக்கும்,(அப்படி இல்லை என்றால் தலைவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று அர்த்தம்.)

ஆகவே நீங்கள் இந்த ஸ்டண்டை பொருட்படுத்தாமல் உங்கள் வேலையைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment