Saturday, January 22, 2011

மதம் மாறுபவன் முட்டாள்! மதம் மாற்றுபவன் அயோக்கியன்!!



கடவுள் இருக்கலாம் இல்லாமலும் போகலாம், ஆனால் இவரை வைத்து நடத்தப் படும் விளையாட்டுகளுக்கு அளவே இல்லை. திருவாரூர் தங்கராசு அவர்கள் ரத்தக் கண்ணீரில் எழுதியதைப் போல, ஊரூருக்கு ஒரு தலைவன், ஆளாளுக்கு ஒரு கொள்கை, அவனவனுக்கு ஒரு டஜன் பட்டினிப் பட்டாளம்...

நாடு நாட்டுக்கு ஒரு மதத் தலைவன் உருவாகி மதம் வளர்த்தினார்கள். அதை நாடு கடந்து பரப்பினார்கள். உலகத்தில் உள்ள  முட்டாள் மக்கள் மதம் மாறி ஏற்றுக் கொண்டார்கள். எந்த ஒரு புது மதமும் தோன்றிய இடத்துக்கு அப்போதைய சூழ்நிலைக்கு அந்த அந்தக் காலத்துக்கு மட்டுமே ஏற்றது என்பது என்கருத்து. அதை விடாமல் பின்பற்றி அதற்காக சண்டை போட்டு வெடி குண்டு வைத்து தற்கொலை செய்து  பிறரையும் கொன்று ஊனமாக்கி, நாடு நகரை எல்லாம் சின்னா பின்னமாக்கி சீர்கெடுத்து  அப்பப்பா, என்ன கொடுமைடா இது. 

மதம் மதத்துக்கு ஒவ்வொரு சம்பிரதாயம், என் மதத் தலைவனைப் பார்த்து நீ சிரித்தாய் உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் பார் என்று மரண தண்டனை விதித்து மதப் பற்றைக் காட்டிக் கொள்ளும் காட்டு மிராண்டிகள்... 

மதத்திலே சொல்லப்பட்டது என்று சான்று கூறி கற்பழித்த மாமனாருக்கு மருமகளைக்  கட்டிவைத்து, கணவனை இனி நீ மகன் என்று தான் கூற வேண்டும் என்று தீர்ப்பு சொல்லும் மதவாதிகள். தாழ்ந்த சாதிக்காரனை தீயில் குளித்து கோயிலுக்குள் வா என்று சொன்ன தீட்சிதன்கள்.ஊமைகளைப் பேச வைக்கிறார் முடவர்களை நடக்க வைக்கிறார் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி வெளிநாட்டுப் பணத்துக்கு உள்ளூர் மக்களை விற்கும் மதம் மாற்றிகள், பார்க்கப் பார்க்க நெஞ்சம் கொதிக்கிறது. 

மதம் மாறுவோர் பலவிதம் , பருவக்கோளாறில்  எவளோ ஒருத்தியிடம் மயங்கி அவள் சொன்னாள் என்று மதம் மாறும் அப்பாவிகள், சாகக் கிடக்கும் அப்பாவிமக்களிடம் அரசு மருத்துவ மனைக்குச் சென்று இன்ன கடவுளைக் கும்பிடு எழுந்து வருவான் நோயாளி என்று மூளைச் சலவை செய்து மதம் மாறவைத்து வேறு இடுகாட்டில் நோயாளியைப் புதைக்க வைக்கும் மத ஏஜென்ட்கள், இந்த மோசடிக்காரர்கள் எல்லாம் சுத்தமான உடை உடுத்தி இருப்பார்கள், முழுக்கை சட்டை அணிந்து பேண்டுக்குள் இன் செய்து இருப்பார்கள். கையில் மதப் புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு கழுத்தில் மதச் சின்னம் அணிந்து இருப்பார்கள்.  இங்கே மதம் மாறியவனுக்கு இடு காடுதான் மாறியதே தவிர முடிவு ஒன்று தான், ஆனால் அவன் ஏமாற்றப் பட்டதை உணர்வதற்குள் அவன் இருந்து விட்டான். ஐயோ பாவம். 

இன்னும் பிற நாட்டுக்கவோ மக்களுக்காகவோ சாகாமல் மதத்துக்காகச் சாகும் மனநிலை பாதிக்கப் பட்ட இளைஞர்கள். இவர்களுக்கு மூளைச் சலவை செய்யப் படும் விதம் அலாதியானது, "நீ மதத்துக்காக தற்கொலைப் படையில் சேர்ந்து உயிர் விட்டால், சொர்க்கத்துக்குப் போவாய். அங்கே கடவுள் வாசலில் நின்று உன்னை வரவேற்பார். சொர்க்கத்தில் 72  கன்னிப் பெண்களுடன் உடல் உறவு கொள்ளலாம். ......" என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறுவார்கள். செத்த பிறகு இதெல்லாம் கிடைக்க வில்லை என்று வந்து கேட்கவா போறான்?

எனக்கு ஒரு சிறு சந்தேகம், எல்லா மதத்திலும் சொர்க்கத்தில் கன்னியருடன் குலாவுவதையே சொல்கிறார்களே சொர்க்கம் என்பது என்ன சிவப்பு விளக்குப் பகுதியா? சோம பானம் சுறா பானம் எல்லாம் சொல்கிறார்களே அங்கே என்ன டாஸ்மாக் பாரா இருக்கிறது?
அப்படியானால் சொர்க்கத்துக்குப் போய் அதை எல்லாம் அனுபவிப்பதை விடுத்து இங்கேயே அதை அனுபவித்தால் என்ன? இங்கேயும் சிவப்பு விளக்குப் பகுதிகள் இருக்கிறது, டாஸ்மாக் பார்கள் இருக்கிறது. அப்படியானால் சொர்க்கமும் இங்கே இருக்கிறது என்று தானே அர்த்தம். இங்கே நீங்கள் சென்றால் ஒருவேளை கடவுளைக் கூடச் சந்திக்க நேரிடலாம்!

மதம் மாறியவர்கள் அலட்டிக் கொள்வதைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வரும். எதோ கடவுளின் காம்ப்லக்சிற்குள் குடிபெயர்ந்து விட்டவர்களைப் போல இவங்கள் நடத்தும் நாடகங்கள் ஐயோ பாவம் என்று தோன்றும்,  அட பாமரனே!


முடிவாகச் சொல்கிறேன் மதம் மாறினால் செத்த பிறகு புதைக்கப் போகும் சுடுகாடோ இடுகாடோ தான் மாறும் மற்றபடி நிலைமை ஒன்றுதான் மானிடா!

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக வழிகாட்டுமாறே !"

2 comments:

  1. உண்மை அய்யா அவர்கள் பண்ணும் அழிச்சாட்டியம் தாங்கமுடியவில்லை

    ReplyDelete
  2. எனக்குள் இருக்கும் அதே மனக்குமுறல் உங்களுக்குள்ளும் உள்ளது நண்பரே. தொடருங்கள்.

    ReplyDelete