Tuesday, January 11, 2011

ஐயப்பன் கட்டுக் கதையும் வரலாற்றுத் திரிபும்


 எத்தனையோ முறை சொல்லிச் சலித்தாயிற்று இருந்தாலும் நான் சொல்லியே தீரவேண்டும். ஐயப்பன் கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதில் வரலாற்றுத் திரிபு ஒன்று என்னால் கண்டறியப் பட்டது.(Anachronism). 

பந்தள ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் என்பது கதை. இந்தப் பந்தள வம்சம் மதுரை மன்னர்களின் வழித் தோன்றல்கள். இதை தற்போது இருக்கும் பந்தள வாரிசு ஒப்புக் கொண்டு தமிழ் வார இதழுக்குப் பேட்டியும் தந்து இருக்கிறார். பந்தள வம்சத்தின் முக்கியக் கடவுள் மதுரை மீனாட்சி அம்மன். இதையும் அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் அய்யப்பனுக்குச் செய்யும் சடங்கிற்கு மதுரையில் இருந்து சீர் செல்கிறது. இதுவும் அவரது பேட்டியில் இருக்கிறது. சரி இப்போது அதற்கு என்ன? இன்னும் தமிழக கிராமப் புறத்தில் வணங்கப்படும் அய்யனார் மற்றும் பதினெட்டுப் படிக் கருப்பன் தான் ஐயப்பன் என்பது புலனாகின்றாதா?
ஐயப்பன் என்பது தமிழக நாட்டுப்புறக் கடவுளின் தாக்கம் தான் என்று உறுதியாகக் கூறலாம்.

சரி Anachronism  என்றால் என்ன ?
வரலாற்றில் முன்னுக்குப்பின் முரணாக நடந்தவைகளை மாற்றிச் சொல்வது. அதாவது ராஜ ராஜ சோழனும் சேரன் செங்குட்டுவனும் சேர்ந்து கல்லணை கட்டினார்கள் என்பது போல.

சரி இங்கே எது Anachronism? 
ஐயப்பன் கடவுளர்களின் மகன் அதாவது சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பிறந்தவர். (HOMOSEXUAL அல்ல) அந்தக் கட்டுக் கதையை இப்போது சொல்லவில்லை. ஐயப்பனின் நண்பர் வாவர் என்னும் முஸ்லிம்.

இந்தியாவிற்கு ஏழாம் நூற்றாண்டில் தான் முஸ்லிம் வணிகர்கள் கேரளா  வருகிறார்கள். அதன் பின் எப்படியோ முஸ்லிம் மக்கள் பெருகி வாவர் என்பவர் படை உருவாக்குகிறார். சரி அதை எல்லாம் விடுங்கள். ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு கடவுளின் மகனும் ஒரு முஸ்லிம் படைத்தலைவனும் மோதிக்கொண்டு சமாதானமாகி நண்பர்கள் ஆகிறார்கள். ஏழாம் நூற்றாண்டு என்பது வரலாற்றுக்கு உட்பட்ட காலம். இதை ஏன் இந்திய வரலாற்று அறிஞர்களால் கண்டு கொள்ள முடியவில்லை? ஏனெனில் இதைப் போல எங்கோ நடந்த எதோ ஒரு சிறிய விஷயத்தை பெரிது படுத்தி கடவுளின் பெயரால் வியாபாரம் செய்கிறார்கள். கடவுளின் மகன் என்றால் சாதாரண விஷயமா? இயேசு கூட கடவுளின் மகன் தானே? அந்தக் கட்டுக் கதை எப்படி இருக்கிறது? அவர் என்னென்ன செப்படி வித்தைகளை எல்லாம் செய்தார். ஐயப்பனைப் பற்றி முழுதாக ரீல் விடுவதற்குள் அவர் படம் ரிலீஸ் ஆகிவிட்டதோ?

இந்துக் கடவுள்கள் அவதாரம் எடுப்பது யுகம் யுகமாகும் என்பது நம்பிக்கொண்டிருக்கும் கட்டுக் கதை. அப்படி இருக்க எந்த யுகத்தில் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்தார்கள்? எந்த யுகத்தில் ஐயப்பன் பிறப்பிக்கப்பட்டார்? கி பி ஏழாம்  நூற்றாண்டு ஒரு யுகத்துள் வருகிறதா? பிறகு கலியுகம் என்பது எது?

முட்டாள் அய்யப்ப பக்தர்களே ஒரு கட்டுக் கதையை நம்பி கட்டுக் கட்டிப் போய் சபரி மலையில் மலையாளிகளிடம் செருப்படி வாங்கி வருகிறீர்களா? மூடர்களே நீங்கள் கடவுளை நம்புவதை நான் குறை கூறவில்லை. எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது.

இங்கே இல்லாத கடவுளா? கோயிலா? அறிவு கெட்ட முண்டங்களாபோய் மலையாளத்துக்காரனிடம் அடிவாங்கவா விரதம் இருந்து போறீங்கசாமின்னா எல்லாத்தையும் நம்பிவிடுவீர்களா? யோசித்துப் பாருங்க கடவுளை நம்பினால் பரவாயில்லை, கட்டுக் கதையை நம்பாதே.

No comments:

Post a Comment