Sunday, February 6, 2011

பெரியார் அண்ணா செய்யாததைச் செய்து காட்டிய எஸ்.வி.சேகர்



தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் தங்களது வாழ் நாளில் செய்ய முடியாததைச் செய்து காட்டியவர் எஸ் வி சேகர். காஞ்சி மடம் ஒரு காமக் கிழத்தியர் குடியிருப்பு என்று திராவிட இயக்கத்தினர் கூடச் சொல்லக் கூசும் செய்தியை ஜெயலலிதாவுக்குச் சொல்லி ஜெயேந்திரனை உள்ளே தள்ளிய உத்தமன் எஸ் வி சேகர். இது வரைக்கும்  பிரதமர்கள் ஜனாதிபதிகள் எல்லாம் அந்த ஆள் காலிலே விழுந்திருக்கிறார்கள் . அதற்கெல்லாம் அந்த ஆள் தகுதி இல்லாதவன் என்று அந்த ஆள் அருகிலே இருப்பவர்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் பார்ப்பான் என்ற காரணத்தினால் அதை அவர்கள் ரசிக்கவே செய்தார்கள்.


எல்லாச் சேனல்களில் இந்த ஆள்தான் இந்துக்களின் மத குரு என்பது போல் மாயப் பிரச்சாரம். அதை எல்லாம் தவிடு போடி ஆக்கியது அண்ணன் எஸ்.வி.சேகரின் வாக்கு. பார்ப்பனனாக இருந்தாலும் ஒரு சுத்தத் தமிழனைப் போல நடந்து கொண்டார். 

இவருக்கு தமிழ் மீது ஆர்வமா கோவமா என்பதைவிட இவர் வார்த்தைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். இவர் தான் தூர்தர்சன் மட்டும் இருந்த காலத்தில் ஒரு மேடையில் சொன்னார் , "திராவிடக் கட்சிகளால் தமிழ் நாட்டில் ஹிந்தி படிக்க முடியாமல் போனது, அதனால் தமிழ் நாட்டுக் காரர்கள் யாரும் எட்டு மணிக்கு மேல் டிவி பார்க்க முடியவில்லை, " என்று. 

இவரது ஆதங்கத்தைப் போக்கவோ என்னவோ இப்போது பாருங்கள் எத்தனை டிவி சேனல்கள் தமிழில் பார்க்கப் பார்க்கத் தீர மாட்டேன்  என்கிறது. தமிழ் நாட்டுக்கு நல்லதே செய்யும் எஸ்.வி.சேகர் இன்னும் ஒரு நல்லது செய்ய வேண்டும், எப்படி?

மகாத்மா காந்தி சுதந்திரத்துக்குப் பின் காங்கிரசைக் கலைத்து விட வேண்டு என்று சொன்னார். இப்போது எஸ்.வி.சேகர் காங்கிரசில் சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரது கனவுகளை நிறைவேற்றியவர், காந்தி கனவை நனவாக்க நாமும் வாழ்த்துவோம். 

2 comments:

  1. சொல்வது எல்லோருக்கும் இலகுவான காரியம்,செய்வதுதான் ...............

    ReplyDelete
  2. //மகாத்மா காந்தி சுதந்திரத்துக்குப் பின் காங்கிரசைக் கலைத்து விட வேண்டு என்று சொன்னார். இப்போது எஸ்.வி.சேகர் காங்கிரசில் சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரது கனவுகளை நிறைவேற்றியவர், காந்தி கனவை நனவாக்க நாமும் வாழ்த்துவோம். //

    நச்சுனு ஒரு கமெண்ட்.............

    ReplyDelete