Tuesday, February 1, 2011

கேமரான் டயசுக்கு ஏஞ்சலினா ஜூலிக்கு கலைமாமணி விருது.

தெலுங்கு நடிகைகள் மலையாள நடிகைகள் எல்லாருக்கும் தமிழர் தலைவர் கலைமாமணி விருது வழங்கப் போகிறார். இவர்களது கலைச்சேவை அனைவரும் அறிந்ததே. இவர்கள் ஒன்றோ இரண்டோ தமிழ்ப் படங்களில் நடித்திருக்கலாம், இவர்கள் தமிழர்களின் மனத்தைக் கொள்ளையடித்து இருக்கலாம், இதனால் விருதுக்கு பெயரைப் பரிந்துரைப் போர் இவர்களது பெயரையும் சேர்த்து இருக்கலாம். அல்லது இவர்களது பெயர்களைத் தவிர்க்க முடியாததால் சேர்த்து இருக்கலாம், இருக்கட்டும்......

தமிழர்களுக்கு வெள்ளைக்காரிகளைப் பிடிக்காது என்று யார் சொன்னார்கள், மேற்கண்ட இரண்டு பேர் மட்டுமல்ல சான்றா புல்லக், ட்ரு பேர்ரிமூர், ரீஸ் விதேர்ச்பூன், இன்னும் ஏராளமான நட்சத்திரங்களை எல்லாம் கலைமாமனிக்கு சிபாரிசு செய்யலாமே, ஆனால் இவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள், என்று கேட்காதீர்கள், மற்றவர்கள் மட்டும் என்ன செய்தார்கள்? இவர்கள் செய்யாததை?... இவர்களும் தமிழ் மக்களுக்கு சேவை செய்துள்ளார்கள். எப்படி? ஹாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும் அவைகளும் டப்பிங் செய்யப்பட்டு தமிழ்ச் சேன்னல்களில் ஒளிபரப்பு செய்யப் படுகின்றனவே. அப்படியானால் இவர்களும் தமிழ்ச் சேவை செய்கிறார்கள், தமன்னா, அனுஷ்கா, மீரா ஜாஸ்மின் போல.... அப்பாவி வெள்ளைக்காரிகள் என்றால் இளக்காரமா என்ன? குரல் கொடுக்க நாங்க இருக்கோம்னேன்!

No comments:

Post a Comment